Saturday, 31 July 2021

பாரதி வந்து பார்த்தால்...

 

பாரதி வந்து பார்த்தால்...

சாதிக்கு ஒரு சங்கம்க்ஷஆனால் சாதி கூடாது என பிரசங்கம்                                        தேர்தலுக்கும் வேண்டும் சாதி ஆனால் சாதி கூடாது என அதிபிரசங்கம்

சத்தம் போட்டு சந்திக்கு சந்தி கூடுவதும் சாதிக் கூட்டம்                                                              சாதி கூடாதென முச்சந்தியில் கூவுவதும் அதே கூட்டம்

சாதிப் பெயரில் சதவிகிதப்படி வேலை        சாதி வெறியில் சகிக்க முடியாதபடி கொலை

சிங்களத்து தீவிற்கும் பாலமில்லை வங்கத்தில் ஓடும் நீருக்கும் தீர்வில்லை

ஆணின் தன்மையில் மாற்றமில்லை                  பெண்ணின் தரத்தில் ஏற்றமில்லை

நிலை கெட்டு விட்டார் மானிடர்                              பராசக்தியும் பாரா சக்தியானாள்

எனக்குக் காணி நிலமும் வேண்டாம்                    காட்டுமிராண்டி வாழ்வும் வேண்டாம்

"பாரதி கால் தூக்கி ஓடி விடுகின்றார்"

- தஞ்சை த இராமநாதன்

மனித உரிமைகளுக்கும் ஒரே ஒரு தினம்!

 

மனித உரிமைகளுக்கும் ஒரே ஒரு தினம்!

உரிமையைப் பறிப்பதும் மனிதனே உரிமையை மறுப்பதும் மனிதனே

உரிமைக்காக மனிதப் போராட்டம் உரிமைக்காக மறியல் போராட்டம்

சட்டம் போடுவதும் மனிதனே                        சத்தம் போடுவதும் மனிதனே

திட்டம் போடுவதும் மனிதனே            திட்டத்தோடு திருடுவதும் மனிதனே

தனி மனிதக் கடமை என்னானது?                  தனி மனித ஒழுங்கு என்னானது?

தனி மனித கர்வம் அதிகமானதேன்?          தனி மனித ஆசை அதிகமானதேன்?

ஆறாவது அறிவுதான் ஆபத்தானதா?        அதே அறிவுதான் அபத்தமானதா?

மாற்றம் ஒன்றுதானே மாறாதது?            இன்றே மாறுவோம் மனிதர்களாக!

- தஞ்சை த இராமநாதன்

Friday, 30 July 2021

நன்னனான திருஞானசம்பந்தரின் பார்வை

 

நன்னனான திருஞானசம்பந்தரின் பார்வை

ராகு எமகண்ட காலத்தைத் தவிர்த்தாலும்        எமனின் கணக்கைக் தவிர்க்க முடியுமா?            குருவோடு சுக்கிரப் பெயர்ச்சி பெயர்ந்தாலும் கொரோனா பெயர்ச்சியை தவிர்க்க முடியுமா?

நாள் பார்த்து கெட்டி மேளத்தோடு கட்டியதெல்லாம் நிலைத்ததும் உண்டா?            கலப்பு இல்லாது கட்டிக் கலந்த உறவுகள் கெட்டியாகுமென நினைத்ததும் உண்டா?

எண்ணையும் எழுத்தையும் எண்ணாது எழுதினால் மாற்றம் வருமா?                                  கையூட்டைக் கொடுப்பதும் வாங்குவதும் தொடர்ந்தால் மாற்றம் வருமா?

- தஞ்சை த இராமநாதன்


ஊழல் ஒழியட்டும்

 

ஊழல் ஒழியட்டும்

பிறந்ததைக் கொண்டாட ஒரு நாள்; மறைந்ததைக் கொண்டாடவும் ஒரு நாள்

மீண்டும் மீண்டும் வரும் நாள்; வேண்ட வேண்டி வரும் நாள்

ஊழலை ஒழிக்க இந்த ஒரு நாள்; ஊழலை ஒழித்திடுமா இந்த ஒரே நாள்?

வேண்டும் ஊழல் ஒழிப்பு நாள்; வேண்டும் ஊழல் ஒழிந்த நாள்!

- தஞ்சை த இராமநாதன்

வள்ளலார் பரம்பரை

 

வள்ளலார் பரம்பரை

வாடியப் பயிரில் வாடும் மனிதா            வடலூரார் வழியில் வந்த மனிதா

ஓர் இரவில் நகரமும் மூழ்கலாம்                        மறு இரவில் பயிரகமும் துளிரலாம்

பொருக்குதான் உனக்குப் பஞ்சு மெத்தை        அது கொடுக்கும் உனக்கு மெல்ல சுகத்தை

மனம் கரைந்துக் கண்ணீர் வழியும்            மேகம் கரைந்துத் தண்ணீர்ப் பொழியும்

கண்மாய் ஏரி நீரால் நிறையும்                            பசி பட்டினி விரைவில் குறையும்

ஆண்டுதோறும்  மழைப் பொழியணும்              உழைப்பவர் உயர்வோடு வாழணும்!

- தஞ்சை த இராமநாதன்

Thursday, 29 July 2021

புலியின் தனிச் சிறப்பு

 

புலியின் தனிச் சிறப்பு

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாதாம்; புலிக்கே உரிய தனிச் சிறப்பாம் அது

புலிக்குப் பிறந்தது பூனை ஆகாதாம்; புலிக்கே உரிய தனிச் சிறப்பாம் அது

புலிப் படத்தோடு சோழர் கொடியாம்; புலிக்குக் கிடைத்த தனிச் சிறப்பாம் அது

புலி வேகமாக நீரில் நீந்திக் கடக்குமாம்; புலிக்கே உரிய தனிச் சிறப்பாம் அது

புலி உறுமல் மூன்று மைல் கேட்குமாம்; புலிக்கே உரிய தனிச் சிறப்பாம் அது

புலி வேகத்துடன் தொடர்ந்து ஓடுமாம்; புலிக்கே உரிய தனிச் சிறப்பாம் அது

புலியில் எடை குறைந்தது பெண்ணாம்; புலிக்கே உரிய தனிச் சிறப்பாம் அது

புலி முப்பதடி வரை தாவிப் பாயுமாம்; புலிக்கே உரிய தனிச் சிறப்பாம் அது!

- தஞ்சை த இராமநாதன்

சுகமான சுமை

 

சுகமான சுமை

கூடை மேலே குடத்தோடு வாளி; குடம் சூழ குடும்பத்தோடு வாழி                                                குடத்தை விற்றாலும் கோடி வராது; தேடி சிரித்தாலும் உம் சிரிப்பு வராது

உள்ளதைக் கொண்டு நல் வாழ்வு; குடத்தோடு வாளியால் நல வாழ்வு                                              ஏக்கம் இல்லாத தூக்க வாழ்வு; தயக்கம் இல்லாது தூக்கும் வாழ்வு

இரக்கம் கொண்டு இறக்க வாரீர்; இறக்கிய பின் ஏற்றவும் வாரீர்                                                  ஏற்றம் கண்டு இன்புற்று வாழ்க; மாற்றம் கண்டு மகிழ்வோடு வாழ்க!

- தஞ்சை த இராமநாதன்

படித்த மேதை அம்பேத்கர்

 

படித்த மேதை அம்பேத்கர்

பொருளாதாரத்தில் முனைவர் பட்டம்; சட்டம் பயின்று பாரிஸ்டர் பட்டம்            பயின்றதெல்லாம் அயல் நாட்டில்; சேவையெல்லாம் பிறந்த நாட்டில்

அறிவோடு அரசியலமைப்புத் தந்தார்; உரிமைக்கு கட்டமைப்புத் தந்தார் மேதைகளுக்கு எல்லாம் மாமேதை; அரசியல் செய்யாத அரசியல் மேதை

பயனில்லா பதவியை அவர் எறிந்தார்; சுயநல மானிடரும் அவரை மறந்தார்      சமூகம் நீதிபெற அரும்பாடு பட்டார்; சமூகத்தால் பொறுப்பற்று தோற்கடிக்கப் பட்டார்

மாற்ற நினைத்த அவருக்கு ஏமாற்றம்; மாறா மானிடருக்கே அது ஏமாற்றம்                                  நிலவரம் அறிந்து துறவறம் பூண்டார்; சிலையாக மாறி நிரந்தரம் கெண்டார்!

- தஞ்சை த இராமநாதன்

Wednesday, 28 July 2021

இயற்கைதான் வெல்லும்

 

இயற்கைதான் வெல்லும்

ஐந்து வகை நிலங்கள் ஆங்காங்கே இருந்து பூமி செழித்தது இயற்கை                                        ஐந்து வகை நிலத்தையும் நினைத்த                    இடத்தில் வடிவமைத்தது செயற்கை

கிணற்று நீரை இறைத்து மண் பானையில் வைத்துக் குடித்தது இயற்கை                              ஆழ் துளையிட்டு நீரை நெகிழியில்                      அடைத்துக் குடிப்பது செயற்கை

நடந்தே சென்று மெய் வருந்த உழைத்து செழித்து வாழ்ந்தது இயற்கை                                உட்கார்ந்தே பெருத்து நோய் வந்து                      இளைத்து வீழ்ந்தது செயற்கை                    

மதம் மாறாமல் மதம் பிடிக்காமல் மேதைபோல் வாழ்வது இயற்கை                        மதம் மாறி மதம் பிடித்த போதையால் பேதைபோல் வாழ்வது செயற்கை

மலையெல்லாம் கடலாக கடலெல்லாம் மலையாக நிலம் மாறுவது இயற்கை                  நிலம் நீர் காற்றை நாசம் செய்து                            நாசமாக்கி மனிதன் மாற்றுவது செயற்கை! 

- தஞ்சை த இராமநாதன்

மண்ணின் மகிமை

 

மண்ணின் மகிமை

வளமான வண்டலும் இங்குண்டு; செம்மண் செழுமையும் இங்குண்டு

கருமையான கரிசலும் இங்குண்டு; பானையாகும் களியும் இங்குண்டு

மண்ணை வெட்டிக் குவிக்காதீர்; மண்ணைக் கூட்டி விற்காதீர்

மண்ணின் வளத்தைத் திருடாதீர்; மண்ணின் மாண்பை மறக்காதீர்

விவசாயித் தொழிலை அழிக்காதீர்; மண்ணின் மைந்தனை சீண்டாதீர்

மூவேந்தர்களின் வீரமிகு மண்; வளங்களின் வீரியமிகு மண் 

உயிருக்கும் மேலான தன்மான மண்; தரணியில் உயர்வான தமிழ் மண்

தமிழ் மண்ணை வீழ்த்த முடியாது; வீழ்த்த நினைத்தால் வாழ முடியாது!

- தஞ்சை த இராமநாதன்

கடலும் கரையும்

 

கடலும் கரையும்

கடலில் இருப்போர் கரை சேர ஏக்கம்; கரை சேர்ந்தோர் கடல் சேர ஏக்கம்

கடலில் உப்பெடுக்க கரை தேவை; உப்பு கரைசேர கடல் தேவை

மிதந்தால்தான் தண்ணீரில் வாழ்வு; பறந்தால்தான் காற்றினில் வாழ்வு

மிதந்தே பறக்கும் கலப்பட வாழ்வு; அது தரையில் வாழும் மானிட வாழ்வு!

- தஞ்சை த இராமநாதன்

Tuesday, 27 July 2021

காலமெல்லாம் கலாம்

 

காலமெல்லாம் கலாம்

ஏழ்மையுடன் எளிமையான இளமை வாழ்வு

தூய்மையுடன் இனிமையான முதுமை வாழ்வு

விஞ்ஞானத்துடன் விஞ்ஞானியாகவும் மெய்யான வாழ்வு

மெஞ்ஞானத்துடன் மெஞ்ஞானியாகவும் மெய்யான வாழ்வு

பெருமையுடன் இளைஞர்களைத் தட்டி எழுப்பினார்

பொறுமையுடன் முதியவர்களைச் சுட்டி எழுப்பினார்

நாட்டை வல்லரசாக்க பல ஏவுகணைகளைத் தந்தார்

நாட்டை வளமானதாக்க பல அரசாணைகளைத் தந்தார்

யாதும் ஊரே என்றார்; அகில உலகமும் அறிந்தது தமிழின் சிறப்பை

யாவரும் கேளிர் என்றார்; அகில உலகமும் உணர்ந்தது தமிழனின் பிறப்பை!

- தஞ்சை த இராமநாதன்

ஒன்று விட்ட தலைமுறையின் ஒன்றுபட்ட உறவு

 

ஒன்று விட்ட தலைமுறையின் ஒன்றுபட்ட உறவு  

உன் மொழி நான் அறிவேன் என் மொழி நீ அறிவாய்!

உன்னைப் போல் நான் இருந்தேன் என்னைப் போல் நீ இருப்பாய்!

- தஞ்சை த இராமநாதன் 

எது நிலையானது?

 

எது நிலையானது?

உடலின் நிலையும் நிலைத்ததில்லை; உலக நிலையும் நிலைத்ததில்லை

அழகு உடலும் மாறிடும் பிணமாக; பாச உணர்வும் மாறிடும் சினமாக

ஒதி பெருத்தாலும் உத்திரம் ஆகாது; உடல் பெருத்தாலும் உருப்படி ஆகாது

முகத்தைப் பார்த்து ஏமாறும் மனம்; மனதைப் பொறுத்து உருமாறும் முகம்

நொண்டியும் இல்லாதது ஆன்மா;  நுடமும் இல்லாதது ஆன்மா! 

கூனும் இல்லாதது ஆன்மா; குருடும் இல்லாதது ஆன்மா!

- தஞ்சை த இராமநாதன்

Monday, 26 July 2021

வாக்காளர் நாள்

 

வாக்காளர் நாள்

வாக்கைப் போட்ட எல்லோரும் நல்ல வாக்காளர்களுமில்லை

வாக்கைப் போடாதோர் எல்லோரும் நல்ல குடிமக்களுமில்லை

வாக்கைப் பெற்றவர்கள் எல்லோரும் நல்ல வேட்பாளர்களுமில்லை

வாக்கை விற்றவர்கள் எல்லோரும் நல்ல வாக்காளர்களுமில்லை

பணத்தைக் கொடுத்து பாவி ஆனவர்கள் நல்ல வேட்பாளர்களுமில்லை

பணத்தை வாங்கி பாவி ஆனவர்கள் நல்ல வாக்காளர்களுமில்லை

மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது; நன்றாய் மாறினால் என்றும் மாறாது!

- தஞ்சை த இராமநாதன்

பசி

 

பசி

பசி தீர்க்கும் உலகம் கொடு 

அல்லது

பசி தீர வழி கொடு இறைவா!

- தஞ்சை த இராமநாதன்

மாயையில் உலகம்

 

மாயையில் உலகம்

சாலையில் நடக்குது ஒரு கூத்து: தரமே இல்லாத தெருக் கூத்து

வயிரைக் கட்டி அழுவோர் அங்கே;; வயிரைக் காட்டி சிரிப்போர் இங்கே

மாயை உலகம் படம் காட்டுது; படமே மாயை அளவைக் கூட்டுது

ஆணைப் பெண்ணாகாவும் பெண்ணை ஆணாகவும் சித்தரிப்புது மாயை

எதை எங்கு செய்ய வேண்டுமோ அதை நன்கு செய்ய வேண்டும்

எதை நன்கு செய்ய வேண்டுமோ அதை எங்கும் செய்ய வேண்டும்!

- தஞ்சை த இராமநாதன்

Sunday, 25 July 2021

கூட்டு வண்டி

 

கூட்டு வண்டி

அடிக்கும் வெயில் அடிக்காமல் இருக்க கூரையோடு அமைந்த வண்டி                              அடிக்கும் காற்றைத் தடுக்காமல் இருக்க திரையோடு அமைந்த வண்டி

பெண் பிள்ளைகளை அழைத்துச் செல்ல பயன்பட்ட வண்டி                                                      பெண் மாப்பிள்ளையை அழைத்துச் செல்லவும் பயன்பட்ட வண்டி

குடை கொண்டு நடக்க முடியாதவர் பயன்படுத்திய லேசு வண்டி                                  வட்டிக்குப் பணம் கொடுக்க முடிந்தவர் பயன்படுத்திய காசு வண்டி

துள்ளிக் குதிக்கும் காளைகளுக்குப் பொருந்தா நாட்டு வண்டி                                          துவளாமல் நடக்கும் காளைகளுக்குப் பொருந்தும் கூட்டு வண்டி!

- தஞ்சை த இராமநாதன்

தமிழுடன் தமிழர்கள்

 


தமிழுடன் தமிழர்கள்

சங்கம் வைத்து வளர்ந்தத் தமிழ்; சங்கத்தமிழ் என்றாகி வளரும் தமிழ்

அன்றும் இன்றும் வளரும் தமிழ்; இன்றும் என்றும் வளரும் தமிழ்

இலக்கணத்தில் சிறந்தத் தமிழ்; இலக்கிய நடையில் உயந்தத் தமிழ் 

தமிழோடு இணைந்தவர்கள் தமிழர்கள்; தமிழால் நிமிர்ந்தவர்கள் தமிழர்கள்! 

- தஞ்சை த இராமநாதன்

ஞாபகத்திற்கு வரும் ஞாபகங்கள்

 

ஞாபகத்திற்கு வரும் ஞாபகங்கள்

அப்பாவின் தோளில் அம்ர்ந்து வெகு தூரம் சென்ற ஞாபகம்

அம்மா ஊற்றிய கட்டித் தயிரை கையில் பிடித்து ருசித்த ஞாபகம்

பாலத்தின் அடியில் எதிரொலியைக் கேட்க சத்தமாகக் கத்திய ஞாபகம்

பொருக்கு மண்ணில் நடந்து கால் சிவந்த ஞாபகம்

தாத்தா பாட்டிக்கெல்லாம் பல் பிடுங்கிய ஞாபகம்

அப்பாயி இடித்த வெற்றிலைப் பாக்கின் வாசம் நுகர்ந்த ஞாபகம்

ரதிக்கேற்ற மன்மதரே எனப் பாடி பரவசமடைந்த ஞாபகம்

தீபாவளிக்கு போட்டிப் போட்டு வெடி வெடித்த ஞாபகம்

புனையல் அடித்த மாடுகள் பின்னே சுற்றி சுற்றி வந்த ஞாபகம்

கவலசால் தண்ணீர் இறைக்கும் கயிற்றால் தூக்கி எறியப்பட்ட ஞாபகம்

வாய்க்காலில் மம்பட்டியால் காலை வெட்டிக் கொண்ட ஞாபகம்

பத்தாயத்தின் உள்ளே அசையாமல் ஒளிந்து விளையாடிய ஞாபகம்

பந்தால் மட்டையை சாய்த்து ஆட்டம் கொடுத்த பந்தாட்ட ஞாபகம்

பளிங்கி ஆட்டத்தில் அடித்து ஆட்டம் கொடுத்த ஞாபகம் 

கிட்டிபில் ஆட்டத்தில் ஓங்கி அடித்து மகிழ்ந்த ஞாபகம்

கபடி ஆட்டத்தில் நாக்கைக் கடித்துக் கொண்ட ஞாபகம் 

குறிஞ்சான் இலை மென்று நாக்கு சிவந்த ஞாபகம்

குளத்தில் அக்கரைக்கு நீந்திச் சென்ற ஞாபகம்

இன்னும் சொல்லாமல் இருப்பது எத்தனை ஞாபகங்களோ?

- தஞ்சை த இராமநாதன்


Saturday, 24 July 2021

ஆன்மீகமும் விவேகமும் மிக்க திலகர்

 

ஆன்மீகமும் விவேகமும் மிக்க திலகர்

பிறப்பு உரிமை மனிதனின் சுதந்திரம் வாழ்வின் நோக்கம் நாட்டின் சுதந்திரம்

திட்டத்தோடு சட்டத்தைப் படித்தார்                        பட்டத்தோடு திட்டத்தையும் வகுத்தார்

தினசரி கேசரியில் காரமான செய்தி                மராட்டா மூலமும் சூடான செய்தி

தலைக் கவசத்தில் தலைமையின் வீரம்            அடர்ந்த மீசையில் ஆளுமையின் வீரம்

சிதம்பரனாரை தன்னோடுக் கொண்டார்          விவேகாநந்தரை தன் வீட்டில் கண்டார்

- தஞ்சை த இராமநாதன்

எங்கும இருப்பதும் நீரே

 

எங்கு இருப்பதும் நீரே

துளியாய் இருப்பதும் நீரே துளியினுள் இருப்பதும் நீரே

வெள்ளத்தில் இருப்பதும் நீரே உள்ளத்தில் இருப்பதும் நீரே

காற்றினில் இருப்பதும் நீரே கார்முகிலினில் இருப்பதும் நீரே

மழையினுள் இருப்பதும் நீரே மலையினுள் இருப்பதும் நீரே

உடலில் இருப்பதும் நீரே கடலில் இருப்பதும் நீரே

சேற்றில் இருப்பதும் நீரே சோற்றில் இருப்பதும் நீரே

ஆற்றில் இருப்பதும் நீரே ஊற்றில் இருப்பதும் நீரே

தண்ணீரில் இருப்பதும் நீரே கண்ணீரில் இருப்பதும் நீரே

ஏரியில் இருப்பதும் நீரே அருவியில் இருப்பதும் நீரே

இளநீரில் இருப்பதும் நீரே குளநீரில் இருப்பதும் நீரே

இங்கும் இருப்பதும் நீரே எங்கும் இருப்பதும் நீரே

பயிரைக் காப்பதும் நீரே உயிரைக் காப்பதும் நீரே!

- தஞ்சை த இராமநாதன்

அம்மாவை அறியாப் பிள்ளைகள்

 

அம்மாவை அறியாப் பிள்ளைகள்

வரைந்த இடத்தில் குழந்தை இருந்தால் புதுமையான பரிமாண உலகம் 

இறந்தத் தாயின் குழந்தையாக இருந்தால் புதுமையான அவமான உலகம் 

அப்பா தெரியாப் பிள்ளைகள் நிறைந்ததால் இது மோசமான உலகம்

அம்மா தெரியாப் பிள்ளைகள் நிறைந்ததால் இது நாசமான உலகம்!

- தஞ்சை த இராமநாதன்

Friday, 23 July 2021

எங்கும் இருப்பது ஒளி

 

எங்கும் இருப்பது ஒளி

கண் மூடினால் ஒளியையும் காணலாம்              கண் விழித்தால் இருளையும் காணலாம்

கண் மூடித் தியானத்தினால் தன் நிலை ஏறலாம்                                                                          கண் மூடித் தனத்தினால் நிலை மாறலாம் 

ஒளிராமல் ஒளிருவது உள்ளத்தின் ஒளி ஒளிர்ந்தே ஒளிருவது விளக்கின் ஒளி

எண்ணத்தில்ஜஜ

- தஞ்சை த இராமநாதன்

ஆடாத ஆடு

 

ஆடாத ஆடு

கிளையைத் தேடி இரையைத் தேடிய ஆடு      இரையைத் தேடி இலையைத் தேடிய ஆடு

ஆடும் கொம்பில் ஆடாதக் கொம்போடு ஏறியதுக் கொம்பாடு                                                ஆடாதக் காலோடு ஆடும் கொம்பில் ஏறி வளைத்ததுத் தெம்போடு!

- தஞ்சை த இராமநாதன்

அறுபதாவது திருமணங்கள்

 

அறுபதாவது திருமணங்கள்

அப்போ ஆயிரம் ஆசைகளோடு அந்த நாள் இப்போ ஆயிரம் அசைகளோடு இந்த நாள்

அப்போ கூட்டுக் குடும்ப வாழ்வு அந்த நாள் இப்போ குருவிக் கூடு வாழ்வு இந்த நாள்

அப்போ பழக்கமில்லா இளங்கிளி இடப்புறம்  இப்போ பழகிப்போன பைங்கிளி வலப்புறம்

அப்போ கையோடு கை உரசும் மணவறை இப்போ தோள் மீது கை போடும் மணவறை

அப்போ கூச்சம் நிறைந்தத் திருமணம் இப்போ கூச்சம் மறைந்தத் திருமணம்

அப்போ இருமனம் இணைந்தத் திருமணம் இப்போ ஒருமனமாகி நடந்தத் திருமணம்!

- தஞ்சை த இராமநாதன்

Thursday, 22 July 2021

அப்பாவின் பாட்டு

 

அப்பாவின் பாட்டு

நான் பெறா கல்விதனை நீ பெற வேண்டும்; கஷ்டமில்லா வாழ்க்கைதனை நீ பெற வேண்டும்

உன்னைப் பார்த்து ஊர் மக்கள் புகழ்ந்திட வேண்டும்; உன்னோடு உன் car-ல் நான் செல்ல வேண்டும்

அம்மாவுக்கு நகை வாங்கி நீ தர வேண்டும்; என் கையாலே அதைச் சூடி நான் மகிழ வேண்டும்

பொன்னோடும் பொருளோடும் நீ வாழ வேண்டும்; பேரோடும் புகழோடும் நீ வாழ வேண்டும்

நான் பட்டக் கஷ்டங்கள் நீ பட வேண்டாம்; நீ படும் கஷ்டங்கள் என் பேரன் படவே  வேண்டாம்

நேர்மையை ஒரு நாளும் நீ மறக்க வேண்டாம்; கர்வத்தை ஒருபோதும் நீ பெறவே வேண்டாம்!

- தஞ்சை த இராமநாதன்

கவிஞரேறு வாணிதாசன்


 












கவிஞரேறு வாணிதாசன்

புது வரவாய் புதுவையில் பிறந்து ஏழு வயதில் தன் தாயை இழந்து

தன் தாய்மொழியை மறந்து துவக்கக் கல்வியை தமிழில் தாசனிடம் பயின்று 

பயின்றதைக் கவிதையாகத் தொடர்ந்து புனைப் பெயர் ரமியைத் துறந்து

பாரதிதாசன் பரம்பரையோடு கலந்து                  பாவலர் தலைமுறையோடு நிறைந்து

கவிஞரேறு எனும் பட்டத்தோடு சிறந்த                வாணிதாசனாகிய அரங்கசாமி!

- தஞ்சை த இராமநாதன்

படிப்பால் உயரலாம்

 

படிப்பால் உயரலாம்

படித்தப் படிப்பால் உயர்ந்து வாழலாம்              படித்துக் கொண்டே மேலும் உயரலாம்

படித்தவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு படிப்பவருக்கு செல்லப் போகும் இடமெல்லாம் சிறப்பு

எப்படியும் படிக்கலாம் என்போர் எப்படிப் படிப்பார்?                                                இப்படித்தான் படிக்கணும் என்போர் அப்படியேப் படிப்பார்

அப்படிப் படித்த எப்படிப்பும் எப்படியும் நற்படி அளக்கும்                                                                      எப்படிப்புப் படித்தாலும் அப்படிப்பு தக்கப்படி அளக்கும் 

ஏட்டுப் படிப்போடு கேட்டுப் படித்தால் முழுமை அடையும் படிப்பு                                                          ஏழெட்டுப் பட்டம் பெற்றாலும் அதுவும் முழுமை அடையாப் படிப்பு

படித்தப் படிப்பிற்கேற்ற தெளிவான மனம் வேண்டும்                                                                    பறக்கும் பறவையைப் போன்ற பரந்த மனம் வேண்டும்!

- தஞ்சை த இராமநாதன்

Wednesday, 21 July 2021

பொறுமை இழந்த பூமியின் குரல்

 

பொறுமை இழந்த பூமியின் குரல்

என்னைக் கொத்திக் கொத்தி உயிர்ப் பிழைத்தாய் ரசித்தேன்                                              என்னைக் குத்திக் குத்தி துளையிட்டுக் குடித்தாய் ருசித்தேன்

வளர்ந்த மரத்தை வெட்டி வெட்டி அழித்தாய் பொறுத்தேன்                                                                நிமிர்ந்த மலையை உடைத்து உடைத்து தகர்த்தாய் பொறுத்தேன்

நன்செய்யை மாற்றி மாற்றி புன்செய் ஆக்கினாய் மறுத்தேன்                          புன்செய்யை மாற்றி மாற்றி மனையென ஆக்கினாய் மறுத்தேன்

வீட்டைக் கட்ட ஆற்று மணலை அள்ளிக் குவித்தாய் குவிந்த மணலானேன்                        வீட்டின் மேல் வீடென அடுக்கடுக்காய் வீட்டைக் கட்டினாய் வீடானேன்                 

அதிர்ந்துக் குலுங்கினால் அடியோடு அழிவீர்கள் என்பதால் தவிர்த்தேன் அழித்துதான் திருத்த வேண்டும் என்ற தத்துவத்தை தற்காலிகமாக தவிர்த்தேன்

உன்னால் என்னை உன் கையால் தூக்கிப் பிடிக்க இந்நாளும் முடியாது                                  நான் தாக்க நினைத்தால் உன்னால் தாக்குப் பிடிக்க எந்நாளும் முடியாது!

- தஞ்சை த இராமநாதன்

எல்லாம் என்னுள் அடக்கம்

 

எல்லாம் என்னுள் அடக்கம்

இமயமலையில் அமர்ந்திருந்தார் யோகி ஒருவர்                                                                            ஏன் இந்த அவல வாழ்க்கை? வினவியவர் அயல்நாட்டுப் பயணி

உம் வாழ்வு உயர் வாழ்வோ? கேட்டார் நம் யோகி                                                                              நிச்சயமென தலை நிமிர்ந்தார் பயணி!

இயம்பிடும் ஓர் உயர்வை என்றார் நம் யோகி தொலைக் காட்சி எம்மிடம் உண்டு என்றார் பயணி

தொலைவில் நடப்பதை யாமும் அறிவோம் என்றார் யோகி                                                            பிதற்றாதீர் என ஏளனித்தார் பயணி

கண் மூடித் தியானித்தார் யோகி                        தப்பிக்க முயற்சியோ? கேட்டவர் பயணி

உடனே உம் ஊருக்குப் போ என்றார் யோகி பயந்து விட்டீரோ என்றார் பயணி?

உம் மகள் நோயின் பிடியில் என்றார் யோகி ஏமாற்றாதீர் என்றார் அந்தப் பயணி

பாறையில் காட்சியைப் பாரும் என்றார் நம் யோகி                                                                              பாறையில் தொலைக் காட்சிபோல் காட்சி

காட்சியில் படுத்தப் படுக்கையாய் பயணியின் மகள்                                                      இது எந்நாட்டு வீடென அலறினார் அப்பயணி

பாறையில் தோன்றியது எப்படி? கேட்டவர் விஞ்ஞானம் கற்றப் பயணி                                    அதுதான் மெஞ்ஞானம் என்று புன்னகைத்தார் நம் யோகி!

- தஞ்சை த இராமநாதன்

எல்லாம் உன்னுள் அடக்கம்

 

எல்லாம் உன்னுள் அடக்கம்

பெரியப் பெட்டிக்குப் பின் சிறியப் பெட்டி            வளர்ச்சி அடைந்தது சின்னப் பெட்டி

மடியில் தவழ்ந்த செல்லக் குட்டி                            கையேந்த வைத்த செல்வக் குட்டி

வேலைப் பளுவை குறைத்ததும் கணினிப் பெட்டி                                                                            வேலை இழப்பை நிறைத்ததும் கணினிப் பெட்டி

தொலைவுக் காட்சியைக் காட்டியே வாழ்த்தும் தொல்லைக் காட்சி                                                    அருகாமைக் காட்சியை காட்டாது வீழ்த்தும் தொலைக் காட்சி!

- தஞ்சை  த இராமநாதன்

Tuesday, 20 July 2021

மண்ணிலே கலை வண்ணம்

 

மண்ணிலே கலை வண்ணம்

மயிலானக் களிமண் நிற்பது அழகு                    மலர்ந்தத் தாமரை ஈர்ப்பதும் அழகு

மண்ணின் வீணை மயக்குவது அழகு              மலரினும் மெல்லிய மங்கையும் அழகு

மண்ணால் வடித்தச் சிலை அழகு                        மனிதனால் கிடைத்தக் கலையும் அழகு

மண் தன்மையில்  இயற்கை அழகு                    மனிதன் தன்மையில் செயற்கையும் அழகு!

- தஞ்சை த இராமநாதன்

மண்ணின் மணல்

 

மண்ணின் மணல்

மண்ணை அள்ளுவதில் கொள்கைக் கொண்டார்                                                                    கொள்ளை அடிப்பதிலும் கொள்கைக்                  கொண்டார்

அள்ளுவதோ அளவில்லா அளவில் மணல் அள்ளியளவும் அள்ளாதளவும் அங்கே அவ்வளவும் மணல்

மலை உடைந்து உருமாறிய ஆற்று மணல்    நிலைமாறி நீரோடு கலந்த ஊற்றுமணல்

பொன் விளையும் மண் அக்கால பழமொழி மண்ணேதான் பொன் இக்கால புதுமொழி

மனிதனின் வண்டியில் ஊர்வலமாய் மண்    ஊர்வல ஊர்தியில் இறுதியில் மனிதனும் மண்!

- தஞ்சை த இராமநாதன்

ஆண்கள் தினம்

 

ஆண்கள் தினம் 

ஆண் தினமும் உழைக்கின்றார்                            ஆண்கள் தினத்திலும் உழைக்கின்றார்

பெண் பிள்ளையை சுமக்கின்றார்                        ஆண் அனைவரையும் சுமக்கின்றார்

பாயோடு பக்குவமானப்  பயணம்                  அந்தக் கோரைப் பாயோடுப் பயணம்

நழுவ விடா பிடியோடுப் பயணம்                        நழுவினாலும் விடாபிடிப் பயணம்

ஆக்கும் கடவுள் ஆண் கடவுள் காத்து                  அழிப்பதும் ஆண் கடவுள்

ஆக்கிக் காத்தலை போற்றா உலகம்                  அழிவை மட்டும் தூற்றும் உலகம்

களைப்பை காட்டிக் கொள்ளார்                              இளைப்பையும் காட்டிக் கொள்ளார்

தன்னலம் பார்க்கா ஆண் வர்க்கம்                        தன்மானம் பார்க்கும் ஆண் வர்க்கம்!

- தஞ்சை த இராமநாதன்

Monday, 19 July 2021

நாடாளுமன்றம்

 

நாடாளுமன்றம்

நல்ல பல மனிதர்களை உறுப்பினர்களாக்கி நாட்டிற்காக முழங்க வைத்த இடம் இது              நல்ல பல திட்டங்களை சட்டங்களாக்கி சட்டங்களை நாட்டிற்காகக் கொடுத்த  இடம் இது

ஆங்கிலேயர் கட்டிக் கொடுத்த நல்ல பல கட்டிடங்களில் இதுவும் ஒன்று                                நூறாண்டுகளைத் தாண்டிய நல்ல பல கட்டிடங்களில் இதுவும் ஒன்று

பழையனக் கழிந்து புதியனப் புகுவதால் நினைவுக் கட்டிடமாகலாம் இது                  நினைவுக் கட்டிடமானாலும் நினைவில் நிற்கும் கட்டிடமாகலாம் இது!

- தஞ்சை த இராமநாதன்

சுயத்தில் சோறு

 

சுயத்தில் சோறு

விதைத்து விளைவித்த ஆக்கக்காரர்                சேற்றின் சோற்றின் உரிமைக்காரர்

தன் வியர்வைப் பார்த்து அயர்வடையார் அடுத்தவர் உயர்வைப் பார்த்து தொய்வடையார்

வயலெல்லாம் வீடாய் மாறிப் போவதேன்?      பயலெல்லாம் பட்டணம் ஓடிப் போவதேன்?

பிடித்தால் பெரும் வெள்ளத்தின் அடி அடித்தால் கடும் வறட்சியின் பிடி

கஷ்டமாயினும் களனிக் கஞ்சியின் சுவை சிறிதா?                                                இஷ்டமாயினும் கடன் அட்டையின் pizza பெரிதா?

முண்டாசுக் கட்டி தலை நிமிர்ந்து நடப்பது சிறிதா?                                                                      Tie கட்டி தலைக் குணிந்து பம்முவது பெரிதா?

தொழிலாளித் தொழிலை முதலாளி தடுப்பது சரியா?                                                        முதலாளித் தொழிலில் தொழிலாளி தவிப்பதும் சரியா?

- தஞ்சை த இராமநாதன்

வீர மகன்

 

வீர மகன்

இயற்கையும் செயற்கையும் புற முதுகில் அம்பிட்டுக் கொன்றாலும் 

என் குல தெய்வமாம் கலப்பையை தோளோடு நெஞ்சில் தாங்கி சுமப்பேன் நான்!

- தஞ்சை த இராமநாதன்

Sunday, 18 July 2021

மீண்டும் வேண்டாம் ஒரு மண்டேலா

 

மீண்டும் வேண்டாம் ஒரு மண்டேலா

திரைமறைவில் உருவானப் போராட்டம்          சிறைமறைவில் வலுவானப் போராட்டம்

மானத்திற்காக நடத்தியப் போராட்டம்                  மனிதத்திற்காக நடத்தியப் போராட்டம்

முடிவுற்றதாக வேண்டும் உரிமைப்                    போராட்டம்                                      தேவையற்றதாக வேண்டும் அடிமைப் போராட்டம்

இல்லையேல்..... 

மகத்தான மண்டேலா ஈடுட்டதும் வீணே              மகாத்மா காந்தி சுடுபட்டதும் வீணே!

- தஞ்சை த இராமநாதன்

பட்டம் பல வகை

 

பட்டம் பல வகை

படித்த எல்லோரும் படிப்பைப் படித்து                  பட்டத்தை வாங்கியவருமில்லை            பட்டத்தை வாங்கியோர் எல்லோரும்                  படிப்பைப் படித்தவருமில்லை

பணம் போட்டு பணம் பெருக்க பலர்                  திட்டத்துடன் பட்டம்                                                      படிப்பைப் போட்டு பணத்தைப் பார்க்க சிலர் பதட்டத்துடன் பட்டம்

மருத்துவர் பிள்ளையை என்றென்றும் மருத்துவர் ஆக்குவதுதான் திட்டம்    அரசியல்வாதி பிள்ளையை என்றென்றும் அரசியல்வாதி ஆக்குவதுதான் திட்டம் 

உழைத்துப் பிழைப்போர் என்றென்றும் ஏக்கத்தோடு படிக்கின்றார்                            ஏய்த்துப் பிழைப்போர் என்றென்றும் ஊக்கத்தோடு படிக்கின்றார்

கசடற கல்வியைக் கற்றால் கற்றக் கல்வி கற்றவரை கைவிடாதுக் காக்கும்            கசடற்றுக் கற்றவரின் நற்கல்வி கற்றவரோடு மற்ற சுற்றாரையும் காக்கும்

நாடு விட்டு நாடு சென்றுக் கற்றாலும்                  நற் கல்வியைக் கற்க முயல வேண்டும்              கற்றபின் பற்று விடாது பிறந்த நாட்டைக்        காக்க கற்றதன் மூலம் முயல வேண்டும்!

- தஞ்சை த இராமநாதன்

சமுதாயம்

 

சமுதாயம்

உடுத்திய உன்னிடம் மெய்யில்லை                  உடுத்தாத என்னிடம் பொய்யில்லை

அனைவரும் சாடுவது சமுதாயத்தை அன்னாந்துத் துப்புவதும் சமுதாயத்தை!

- தஞ்சை த இராமநாதன்

Saturday, 17 July 2021

கடைசி மூச்சு

 

கடைசி மூச்சு

உடல் சுருண்டு நா வறண்டு சொல் குழன்று கண் இருண்ட நிலைதான் அதுவோ?

- தஞ்சை த இராமநாதன்


நகையால் நலமே

 

நகையால் நலமே

பெண்ணின் முகத்தில் நகை அது புன்னகை

காது கழுத்தில் நகை அது பொன் நகை

காதில் சூடினாலும் முகத்தில் நகை

கழுத்தில் சூடினாலும் முகத்தில் நகை

பெண்ணின் நகையோ அல்லது பொன்னின் நகையோ நகைத்தால் நலமே!

- தஞ்சை த இராமநாதன்

பந்தோடு ஓடும் ஆட்டம்

 

பந்தோடு ஓடும் ஆட்டம்

காலணி அணியா புது ஆட்டம் முழு ஆடையுடன் புதுப் பந்தாட்டம்

தடுக்கினால் உருளும் ஆட்டம் உருளாததால் ஓடும் பந்தாட்டம்

பெண்டிரை வைத்து ஆட்டம் ஆடவரால் முடிசூடாப் பந்தாட்டம்

காற்றடித்தப் பந்தில்தான் இந்த ஆட்டம் காற்றடித்தால் நின்று விடும் இந்தப் பந்தாட்டம்

இருகால் இலக்கும் பந்தினில் பந்தாட்டம் ஒருகால் இலக்கில் goal அடித்தால் கொண்டாட்டம்

விளையாட்டே வாழ்வானால் வாழ்க்கை திண்டாட்டம்                                        விளையாட்டே காசானால் வாழ்வில் கொண்டாட்டம்

- தஞ்சை த இராமநாதன்

Friday, 16 July 2021

திருத்தியதா கும்பகோணம்?

 

திருத்தியதா கும்பகோணம்?

பாதுகாப்பு இல்லாமல் பள்ளியைக் கட்டியது நியாயமா?

பாதுகாப்பற்ற பள்ளிக்கு அனுமதி கொடுத்தது நியாயமா?

படிக்க வேண்டுமென பள்ளிக்குச் சென்றது பாவமா?

படிப்பையும் வியாபாரமாக்கியது சமுதாயத்திற்கு சாபமா?

கடவுளை வணங்கியவர் இறந்தது விதியின் சதியா?

பகுத்தறிவிற்கு இணங்கியவர் இறந்தது மதியின் கதியா?

பிறந்தவுடன் ஜாதகம் எழுதி வயதை 80 என கணித்தார் ஜோசியர்

குழந்தை இறந்ததும் பகவான் செயல் என சடங்கு செய்தார் ஜோசியர்

பலவற்றைப் பற்றி பகுத்தறிவாளரின் அரங்கப் பேச்சு

குழந்தைகள் இறந்த பின் மௌனமான இரங்கல் பேச்சு

இறந்த பிள்ளைகளுக்கு நினைவுப் பூமாலை தந்திடுமா பயன்?

இருக்கும் பிள்ளைகளுக்கு தரமற்றப் பாதுகாப்பு தந்திடுமா பயன்?

- தஞ்சை த இராமநாதன் 

எத்தனைக் காலம்?


எத்தனைக் காலம்?

பாஸ்பரஸ் உடல் உழைப்பாளி; என்ன மாதிரி மாற்றம் இது?

மலத்தை அள்ளும் உழைப்பாளி; என்ன மாதிரி மாற்றம் இது?

அரை வயிரோடு உழைப்பாளி; என்ன மாதிரி மாற்றம் இது?

வேலையே இல்லா உழைப்பாளி; என்ன மாதிரி மாற்றம் இது?

பிச்சை எடுக்கும் குழந்தைகள்; என்ன மாதிரி மாற்றம் இது?

கடத்தப்படும் இளம் பிள்ளைகள்; என்ன மாதிரி மாற்றம் இது?

அதிகளவு அனாதைக் குழந்தைகள்; என்ன மாதிரி மாற்றம் இது?

பாலியல் பலியில் குழந்தைகள்; என்ன மாதிரி மாற்றம் இது?

ஆண்டுதோரும் இதே நிலை; என்ன மாதிரி மாற்றம் இது?

ஆளுக்காளு அயோக்கிய நிலை; என்ன மாதிரி மாற்றம் இது!

மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்; என்ன மாதிரி மாற்றம் அது?

ரொம்பவே மாறிவிட்டோம் என்பார்; மாறி மாறி மாறாத மாற்றமா அது?

- தஞ்சை த இராமநாதன்

வீதி உலா

 

வீதி உலா

கடவுளைக் நோக்க உள்ளே நோக்க                      கடவுளைக் காக்க வெளியே நோக்கற்க

பணம் வேண்டி கடவுளிடம் வேண்டல் உண்டியலில் லஞ்சமிட்டுக் கிண்டல்

அரக்கரைக் கொன்றதாக நம்பிக்கை      அரக்கரைக் கொல்வதாக அவநம்பிக்கை

அநியாயத்தை ஒழிக்க உலா வருக                      உலா விழா நியாயத்தைப் பெறுக!

- தஞ்சை த இராமநாதன்

தீ இல்லா தீபத் திருநாள் வாழ்த்து

 

தீ இல்லா தீபத் திருநாள் வாழ்த்து

உள்ளத்தில் உள்ள ஒளியை ஏற்றி

இல்லத்தில் உள்ள ஒளியை ஏற்று

- தஞ்சை த இராமநாதன்

Thursday, 15 July 2021

குமாரசுவாமி காமராஜ்

 

முதல் அமைச்சராகி முதலே வைத்துக் கொள்ளாத முதல் முதல்-முதலமைச்சர்

எளிமையுடன் வாழ்ந்து ஏழையாக மறைந்த முதல் முதல்-முதலமைச்சர்

பிரதமர் பதவியை வேண்டாமென்ற உலகின் முதல் உத்தம-மனிதர்

கிட்டாப் படிப்பை ஏழைக்கும் கிட்ட வைத்த முதல் உத்தம-மனிதர்

- தஞ்சை த இராமநாதன்

அருமையான ஐந்தாம் அறிவு

 

அருமையான ஐந்தாம் அறிவு

கோழி

முட்டைப் போட்டு அடைக் காக்க தனியிடம் பார்க்கும் 

போராடி போரிட்டு பருந்துதிடமிருந்து குஞ்சைக் காக்கும்

பாம்பிடம் கொத்திப் போராடும் மனிதனிடம் கத்திப் போராடும்

பசு

ஈன்ற கன்றை கண்போல் காக்கும் கத்தினால் ஓடோடிப் பார்க்கும் 

பாலூட்டி சீராட்டி கன்றைக் காக்கும் பகைவரை விரட்டி முட்டித் தாக்கும்

பசி மறந்து கன்றைக் காக்கும் பால் தந்து ஏழ்மையைப் போக்கும்

குயில்

கூடு கட்டத் தெரியாக் குயில் கூடி வாழ தெரிந்தக் குயில்

மனம் மகிழும் குயிலின் குரல் கேட்டு கூவினால் அதுதான் காதல் பாட்டு

புறா

சாதகம் பார்த்து சோடி சேரும் புறா பாதகம் செய்து பிரியா பாசப் புறா

அடைக் காக்க உதவும் ஆண் புறா கடைசிவரை நல்லறம் பேணும் புறா

மனிதன்

பகுத்தறிவு மிக்கது மனித இனம் பகுத்தறிந்து வாழணும் அந்த இனம்!

- தஞ்சை த இராமநாதன்