பூவாகி மணந்திடு மொட்டே
பறித்த மொட்டு பொதுவாக எப்போது நுகர்ந்தாலும் மணப்பதுமில்லை
பறித்த மொட்டு மெதுவாக எப்போது மலர்ந்தாலும் மணக்காமலுமில்லை!
மொட்டோடு மொட்டை கோர்த்துக் கட்டா
நாறுகளோ மணப்பதுமில்லை
மொட்டையோடு மொட்டை சேர்த்துக் கட்ட
ஊருகளோ இணங்காமலுமில்லை!
மொட்டில்லாது பூவை மட்டும் சூடிட பாவையர் எப்போதும் விரும்பியதுமில்லை மெட்டில்லாது பாவை மட்டும் பாடிட பாடுபவர் எப்போதும் விரும்புவதுமில்லை!
- தஞ்சை த இராமநாதன்









