Friday, 31 December 2021

மனிதன் மண்டா?

 

மனிதன் மண்டா? 

வெட்டியே வெட்டியாய் வெட்டியதை வெட்டித் தனமாய்ச் சமாளிப்பது சரியா?                            மரத்தை வெட்டும் மரம் வெட்டிகள் வெட்டிச் செயலை மறைப்பதும் சரியா?

மரத்தை நட்டு காடு உண்டானதாய்                      எங்கேனும் வரலாறு உண்டா?                              வெட்டியே வேட்டை வைத்துக்                                  கொள்ளும்                                                                  மரம் வெட்டி என்ன மண்டா?

- தஞ்சை த இராமநாதன் 

பணத்தால் என்ன செய்ய முடியும்?

 

பணத்தால் என்ன செய்ய முடியும்?

வரைந்தது போல் நடந்து விடுமோ?      அதுவும் விரைந்து நடந்து விடுமோ?         மாறா விட்டால் மாற்றி விடுமோ?       இயற்கை வெற்றி பெற்று விடுமோ?

- தஞ்சை த இராமநாதன் 


Thursday, 30 December 2021

கல்லிலே கடவுளைக் காணலாம்

 

கல்லிலே கடவுளைக் காணலாம் 

மலையிருந்தால் மலையைக் குடைந்து கோவிலைக் கட்டிக் காட்டியவர்கள் நாம் கட்டியக் கோவிலில் கடவுளைக் காட்டி வணங்க வைத்துக் காட்டியவர்கள் நாம் 

மலையில்லா இடத்திலும் கல்லை உடைத்து கோவிலைக் கட்டிக் காட்டியவர்கள் நாம்    கட்டியக் கோவிலில் கல்லினுள் கடவுளை வடிவமைத்து காட்சிப்படுத்தியவர்கள் நாம் 

சிறப்பான சிலைகளை உளியால் செதுக்கி கோவிலைக் கட்டிக் காத்தவர்கள் நாம்    அற்புதமான அதிசயங்களுடன் கடவுளால்  கட்டிக் காக்கப்படுபவர்கள் நாம்!

தஞ்சை த இராமநாதன் 

Wednesday, 29 December 2021

விளைவதற்காகப் புதையும் விதைகள்

 

விளைவதற்காகப் புதையும் விதைகள் 

வீட்டு மாட்டை உழவிற்காக ஏரில் பூட்டு    முதல் ஓட்டை மேலாட்டமாய்ப் புரட்டி ஓட்டு  குறுக்கு நெடுக்காய்ப் பலமுறை ஓட்டு    பொள பொளவென மண்ணை மாற்று              வலம் சுற்றிவர மாட்டை மெதுவாய் ஓட்டு ஏரோடு மெதுவாய் நடந்துக் காட்டு            சீராய் விதையை போட்டுக் காட்டு விதையைத் தூர்க்க ஏரை பக்கவாட்டில் ஓட்டு  மண்ணைத் தொட்டு வணங்கு கும்பிடுப் போட்டு!

- தஞ்சை த இராமநாதன்

Tuesday, 28 December 2021

இயற்கையுடன் வாழ்வதுதான் வாழ்க்கை

 

இயற்கையுடன் வாழ்வதுதான் வாழ்க்கை 

வானம் பார்த்தப் பூமி இருப்பதைப் பாரு          வானம் பார்க்காதப் பூமி இருந்தால் கூறு        குட்டிக் கூரை சின்ன ஓட்டு வீட்டைப் பாரு          பாயில் தூங்கும் ஏழையின் அழகைப் பாரு 

ஆடு மாடு கோழியென கூடி நிற்பதைப் பாரு    கிடைப்பதைப் பகிர்ந்து வாழ்வதைப் பாரு      இல்லாததை இருப்பதாகக் காட்டாத ஊரு          இருப்பதை பெருமையாகக் காட்டும் ஊரு 

நமக்கு நல்ல பிராண வாயுவைத் தரும் ஊரு  நம் பிராணனைக் காக்க உதவுவதைப் பாரு      நாம் உயிர் வாழ உன்னத உணவு சோறு      நமக்கு சோற்றைத் தந்திடும் நல்ல ஊரு!

- தஞ்சை த இராமநாதன் 

Monday, 27 December 2021

நட்டப் பயிர் நட்டத்தைத் தருவதேன்?

 

நட்டப் பயிர் நட்டத்தைத் தருவதேன்?

நடும் ஆட்களால் நட்டால் நட்டப் பயிர் நேர்கோட்டில் வரவே வராது          நேர்கோட்டில் வளராவிட்டாலும் நல் விளைச்சலைத் தராமல் விடாது 

நடும் கருவியால் நட்டால் நட்டப் பயிர் நேர்கோட்டிலிருந்து தவறவே தவறாது நேர்கோட்டில் வளர்ந்தாலும் விளைச்சல் அதிகரிக்குமா என்பதுத் தெரியாது 

கருவியால் நட்டாலும் களைப் பறிக்க ஆட்கள் இல்லாது நடக்கவே நடக்காது          கருவியைச் சார்ந்தே சாகுபடி நடந்தால்              நட்டத்தைத் தவிர்க்கவே முடியாது!

தஞ்சை த இராமநாதன் 

Sunday, 26 December 2021

இயேசு அவதரித்த நாள்

 

இயேசு அவதரித்த நாள் 

பிறந்தபோதும் அவரை அவர்தான் என அறிந்தார் எவரும் இல்லை            வளர்ந்தபோதும் அவதாரம் அவர்தான் என புரிந்தார் எவரும் இல்லை 

இறந்தபோதும் உண்மையானவர் என உடனிருந்து இறந்தார் எவருமில்லை    வருடந்தோரும் அவர் பிறந்த தினத்தை கொண்டாட மறந்தார் எவருமில்லை!

தஞ்சை த இராமநாதன் 

Saturday, 25 December 2021

அங்கேயும் இங்கேயும்

 

அங்கேயும் இங்கேயும் 

கிராமத்தில் மாவினால் கோலத்தைப் போட்டு விட்டால் குதூகலமான வாழ்வை வாழ்வதாக அர்த்தமா?

கிராமத்தின் அலங்கோலத்தை கோடிட்டுக் காட்டாததால் கோலாகலமாக வாழ்வதாக அர்த்தமா?

வாய்க்கால் வரப்பு சண்டைகள் வரம்பை மீறி அடிதடிகள் நடப்பது இல்லையா?

பக்கத்து வீட்டாருடன் பகையை வளர்த்து பழிப்பேசி பிதற்றுவது இல்லையா?

நாய்கள் ஜாக்கிரதை என உள்ளதை உள்ளபடி சொல்வதில் தவறே இல்லை 

கோலமிட்டு கும்மி அடித்து உள்ளடி வேலை செய்வதில் தவறா இல்லை?

- தஞ்சை த இராமநாதன் 



Friday, 24 December 2021

பூவில் வாசம்

 

பூவில் வாசம் 

மலர்ந்தும் மலராதப் பூவின் வாசம் இயற்கையில் ஒளிந்தே இருக்கும்            மலர்ந்த செயற்கைப் பூவின் வாசம் செயற்கையில் ஒழிந்தே இருக்கும்

இயற்கைப் பூக்களைப் போன்றதல்ல பளிச்சிடும் செயற்கைப் பூக்கள்            வாடிடுவது இயற்கையானப் பூக்கள்        வாடாதது செயற்கையானப் பூக்கள் 

குறையோ நிறையோ பூவைக் கண்டு மகிழாதோர் பூவுலகில் அதிகம் இல்லை இயற்கையோ செயற்கையோ பூவைப் புகழாதோர் இவ்வுலகில் அதிகம் இல்லை!

- தஞ்சை த இராமநாதன் 

Thursday, 23 December 2021

புத்தியும் புத்தகமும்



 

புத்தியும் புத்தகமும்

புரியாமல் புத்தகத்தைப் படித்தால் சுய புத்தி பெருகி விடுமா என்ன?
புரிந்து புத்தகத்தைப் படிக்க சுய புத்தி இல்லாதவரால் முடியுமா என்ன?

ஒரே புத்தகத்தை ஒவ்வொருவரும் வேறு வேறு விதமாய் புரிந்து கொள்வது ஏன்?
வீணான கருத்துகள் விவேகமானக் கருத்துகளை வெற்றிக் கொள்வது ஏன்?

புத்தகத்தைப் படித்து மேதையாக வாழ்ந்தால் அர்த்தமுள்ள வாழ்க்கை
புத்தகத்தைப் படிக்காமலே மேதையாக வாழ்ந்தால் புண்ணியமுள்ள வாழ்க்கை!

- தஞ்சை த இராமநாதன்

Wednesday, 22 December 2021

வானமும் வண்ணமும் எண்ணமும்

 

வானமும் வண்ணமும் எண்ணமும் 

வெள்ளி நிற முகிலின் வண்ணம் வெள்ளைதானென மனம் எண்ணும்

விண்ணின் கருநீல நிற வண்ணம் நீளமெனவும் மனம் எண்ணும் 

கடலிலும் வானிலும் நீரிலும் இன்னும் மின்னும் வண்ணம் கருநீல வண்ணம் 

வெளுத்தாலும் வலுத்தாலும் மாறாத வண்ணம் நீலமென்பது திண்ணம்!

- தஞ்சை த இராமநாதன் 

Tuesday, 21 December 2021

வெள்ளத்தை வெல்ல முடியுமா?

 

வெள்ளத்தை வெல்ல முடியுமா? 

பசுக்கள் வெள்ளத்தோடு வெள்ளமாக அடித்து செல்லப்படுகிறதா?

பசுக்கள் வெள்ளத்தோடு வெள்ளமாக கடத்தி செல்லப்படுகிறதா?

கொன்று தின்று விடுவார்கள் என்பதால் கோபாலனிடத்தில் செல்கிறதா?

கோமாளிக் கூட்டத்தை விட்டுத் தப்பி கோகுலத்திற்குச் செல்கிறதா?

வெள்ளத்தின் வேகத்தில் தெய்வத்தின் கோபம் தெரிகின்றது 

தெய்வத்தின் கருணையால் கரையைத் தாண்டாமல் செல்கின்றது!

- தஞ்சை த இராமநாதன் 

 

Monday, 20 December 2021

கதிரவனின் எதிரொளி

 

கதிரவனின் எதிரொளி 

காலைக் கதிரவனின் செங்கதிர் ஒளியினைப் பாரீர் 

நீரோடு கலந்து கரையாத சூரியனின் அழகினைப் பாரீர்

தெளிந்த நீரில் தெரியும் தெளிவானக் காட்சிதனைப் பாரீர்

ஆடும் அலையில் அலைந்து ஆடாத நிகழ்வதனைப் பாரீர் 

ஐந்து பூதங்கள் ஐக்கியமான பிரபஞ்ச அற்புதத்தைப் பாரீர் 

நான்கு பூதங்கள் சேர்ந்து நெருப்பாய்த் தெரிவதையும் பாரீர் 

- தஞ்சை த இராமநாதன் 

Sunday, 19 December 2021

தொடரக் கூடாது இத்துயர்

 

தொடரக் கூடாது இத்துயர் 

இடியும்வரை காத்திருந்தது இடியுமென    முன் கூட்டியே தெரிந்து இருந்ததாலா?

 இடிந்ததும் இடிந்ததுபோல் பேசுவது இடியாததையும் இடிக்கும் திட்டத்தாலா?

அறிவில்லாமல் அனுமதிக் கொடுத்து அடித்தளமற்ற பள்ளியைக் கட்டியது ஏன்?

கட்டியக் கயவர்களை உடனே தண்டிக்க சரியான சட்டம் இல்லாதது  ஏன்?

பள்ளியைக் கட்டிய பகுத்தறிவில்லா மூடர்கள் தமிழர்ப் பரம்பரைக்கே சாபக்கேடு              

கட்டி வைத்து உதைத்தால் நடக்காது எந்தக் கட்டிட வேலையிலும் முறைகேடு!

- தஞ்சை த இராமநாதன் 

Saturday, 18 December 2021

போரிலும் சூதிலும் குதிரை

 

போரிலும் சூதிலும் குதிரை 

குதிரையை நம்பி மன்னன் போரிட சென்றானா என்பதும் தெரியாது 

மன்னனை நம்பி குதிரை போர்க்களம் சென்றதா என்பதும் தெரியாது 

வெட்டி வீழ்த்திடுவேன் என்ற ஆணவ நம்பிக்கையில் சென்றானா தெரியாது

மன்னன் மாண்டால் தாவிப் பிழைக்கும் கனவோடு குதிரை சென்றதா தெரியாது 

குதிரையேறி போரிட்ட போர்க் காலம் எங்கும் மாயமாய் மறைந்ததும் புரியுது 

குதிரையை வைத்து சூதாடும் காலம் எங்கும் நிரந்தரமாய் வந்ததும் புரியுது!

- தஞ்சை த இராமநாதன் 

Friday, 17 December 2021

மார்கழி

 

மார்கழி

பீடை மாதமென சொல்லி திருமணத்தை ஒதுக்குது ஒருவிதமானக் கூட்டம்

முகூர்த்த மாதமென திருமணத்தை நடத்துது வேறுவிதமானக் கூட்டம் 

கல்யாண மண்டபம் காற்று வாங்க      தொடங்கி விட்டது இப்போது

கச்சிதமாய்க் காய் நகர்த்தி சிக்கனக் கல்யாணமும் நடக்குது இப்போது

அஷ்டமி நவமி நல்லதல்ல என்கிறது வேறுவிதமான தமிழர்க் கூட்டம்

அஷ்டமி நவமி அற்புதம் என்கிறது மறுவிதமான தமிழர்க் கூட்டம்

கோலத்துடன் வரும் மார்கழியே வருக                குதூகலத்துடன் மகிழ்வைத் தருக!

- தஞ்சை த இராமநாதன் 

Thursday, 16 December 2021

மாறுவது எப்போது?

 

மாறுவது எப்போது? 

உள்ளதைக் கொண்டு நல்லதைச் செய்து முடிப்பது எப்போது?

உள்ளதை வைத்து வாழ கற்றுக் கொள்ள முயல்வது எப்போது?

பொதுக் கழிவறை அடிப்படைத் தேவை என்பதை உணர்வது எப்போது?

பொது இடத்தில் சிறுநீர் கழிக்காமல் மானத்தைக் காப்பது எப்போது?

குப்பையை பொது இடத்தில் குவிப்பதை அனைவரும் தவிர்ப்பது எப்போது?

பணத்தைக் குவிக்க ஓடோடும் நாம் மனதைக் குவிப்பது எப்போது?

அறிவற்றச் சமுதாயம் அறிவானச் சமுதாயமாக மாறுவது எப்போது?

- தஞ்சை த இராமநாதன் 


Wednesday, 15 December 2021

பழத்தின் பலம்

 


பழத்தின் பலம் 

பூத்துக் குலுங்கி காயாய் இருந்து பழுத்தப் பழங்கள் 

சில பச்சையாய் இருந்து பச்சையாய்ப் பழுத்தப் பழங்கள்

சிற்சில பச்சையாய் இருந்து கருப்பாய்ப் பழுத்தப் பழங்கள் 

பற்பல பச்சையாய் இருந்து மஞ்சளாய்ப் பழுத்தப் பழங்கள்

பல நிறமாய் இயற்கையாய்ப் பழுத்தால் அவை பலமிக்கப் பழங்கள்

பளிச்சென செயற்கையாய்ப் பழுத்தால் அவை பயனில்லாப் பழங்கள்! 

- தஞ்சை த இராமநாதன் 


Sunday, 12 December 2021

புகழும் இகழும்

 

புகழும் இகழும் 

யோகாவில் ஆரம்பித்தால் ராஜயோக நிலை அடைந்து புகழுடன் வாழலாம் 

வோட்காவில் ஆரம்பித்தால் கேவலமான   நிலை அடைந்து இகழுடன் வீழலாம்!

- தஞ்சை த இராமநாதன் 

Saturday, 11 December 2021

அரிதானக் கவிஞன் பாரதி

 

அரிதானக் கவிஞன் பாரதி 

அரிது அரிது மனிதரில் பாரதியார் போல் பிறத்தல் அரிது 

அவரைப் போல் சாதி மத பேதமின்றி எழுதுதல் அரிது 


அரிது அரிது கவிஞரில் பாரதி போல்   வாழ்தல் அரிது 

பட்டினிக் கிடந்து பாட்டெழுதி புரட்சி செய்தல் அரிது


பணத்திற்காக பாட்டெழுதாமல் வாழ்தல் அரிதோ அரிது 

தன்மான வீரத்தோடு பாட்டெழுதுவோர் அரிதிலும் அரிது!

- தஞ்சை த இராமநாதன் 

Thursday, 9 December 2021

மதிப்பும் அவமதிப்பும்

 

மதிப்பும் அவமதிப்பும் 

இருகால் உடைய மனிதர் உட்கார நான்குக் கால் நாற்காலி உதவிடும் 

இருகால் இல்லாதோர் உலாவர நான்கு உருளை நாற்காலி உதவிடும் 

நல்லவர்கள் அமரும் காரணத்தால் நாற்காலி பெற்றிடுது சபையில் மதிப்பு 

காலிகள் அமரும் காரணத்தால் நாற்காலி பெற்றிடுது  சபையில் அவமதிப்பு 

- தஞ்சை த இராமநாதன் 

Tuesday, 7 December 2021

எப்படியாயினும் பிச்சை பிச்சையே

 

எப்படியாயினும் பிச்சை பிச்சையே 

நவீனப் பிச்சை எடுப்பதோ ஆன்லைனிலே  பின்புலத்தின் குப்பையோ ஆஃப்லைனிலே!

- தஞ்சை த இராமநாதன் 

Monday, 6 December 2021

வெட்டி வேலை வேண்டாம்

 

வெட்டி வேலை வேண்டாம் 

எதை வெட்ட வேண்டுமென அறிந்து வெட்டினால் அது புத்திசாலித் தனம்            எதை வெட்டக் கூடாதோ அதை      வெட்டினால் அது பித்துக்குளித் தனம் 

வேண்டிய அளவு வெட்டி நீர் நிலையைக் காத்தால் அது அறிவாளித் தனம்          வெட்டித் தனமாய் வெட்டிக் கொண்டே போனால் அது அறிவிலித் தனம்

தூர்க்க வேண்டியதை தூர்க்கா விட்டால் அறிவற்றப் பதர்களின் குருட்டுத் தனம் தூர்வார வேண்டியதை வாரா விட்டால்          அது குள்ள நரிகளின் திருட்டுத் தனம் 

மரத்தை வெட்டி செதுக்கி உபயோகம் ஆக்கினால் அது கெட்டிக்காரத் தனம்      மரத்தை வெட்டிப் பதுக்கி வியாபாரம் செய்தால் அது அயோக்கியத் தனம்!

- தஞ்சை த இராமநாதன் 

தோகையை விரித்தது ஆண் மயில்

 

தோகையை விரித்தது ஆண் மயில் 

ஆடத் தெரிந்தது ஆண் மயில் 

ஆடும் விதத்தைத் தெரிந்தது ஆண் மயில்

தோகையை விரிக்கும் ஆண் மயில் 

துணையை நேசிக்கும் ஆண் மயில்


மழையை வரவேற்கும் ஆண் மயில்

மனையாளை மகிழ்விக்கும் ஆண் மயில் 

வண்ணமிகு தோகையுடன் ஆண் மயில்

தொகைமிகு தோகையுடன ஆண் மயில்


நீலப் பச்சை நிறத்தில் ஆண் மயில் 

கவரும் நிற அழகினில் ஆண் மயில்

கண் வடிவம் தோகையில் ஆண் மயில் 

அழகான தோற்றத்தில் ஆண் மயில் 


என்றும் நேசப் பறவை மயில் 

இன்றும் தேசப் பறவை மயில் 

தமிழர் பண்பாட்டில் கலந்தது மயில் 

தமிழர் வழிபாட்டில் கலந்தது மயில்!


- தஞ்சை த இராமநாதன் 




Sunday, 5 December 2021

அதிசயங்கள் மாறாததா?

 

அதிசயங்கள் மாறாததா?

அதை இதை அதிசயமாக்கியதில் இருந்ததா வரையறை?

அதை இதை அதிசயமற்றதாக்க இருக்கிறதா விதிமுறை?

அதிசயமானவைகள் என்றும் மாறாது என்பது வரையறையா?

புதிய அதிசயங்கள் வரவேக் கூடாது என்பது விதிமுறையா?

கதிரவன் உதித்து மறையும் குமரிக்கரை அதிசயமாகாதது ஏன்?

புகழ்மிக்க தஞ்சை பெரிய கோவில் அதிசயமாகாதது ஏன்?

- தஞ்சை த இராமநாதன் 

Saturday, 4 December 2021

உழைப்பின் உன்னதம்

 

உழைப்பின் உன்னதம் 

பூவைப் பறிக்கத் தேவை உழைப்பு 

பூவைக் கோர்க்கவும் தேவை உழைப்பு

மாலையைக் கட்டத் தேவை உழைப்பு 

தோரணம் கட்டவும் தேவை உழைப்பு


அழகாய் உடுத்தத் தேவை உழைப்பு 

நலமாய் வாழத் தேவை உழைப்பு 

சுமையைச் சுமக்கத் தேவை உழைப்பு

சுகமாய் சுமக்கவும் தேவை உழைப்பு 


வேலைக் கொடுக்கத் தேவை உழைப்பு

வேலைக் கிடைக்கவும் தேவை உழைப்பு  

ஏய்க்காமல் பிழைக்கத் தேவை உழைப்பு

ஏய்த்துப் பிழைக்கத் தேவையே இல்லை உழைப்பு!

தஞ்சை த இராமநாதன் 

Friday, 3 December 2021

ஆட்டுக்கல் மாவுக்கு இணையாகுமா?

 

ஆட்டுக்கல் மாவுக்கு இணையாகுமா?

அரைத்த மாவையே அரைத்து முடித்து                அரைத்து முடித்த மாவை அள்ளி எடுத்து          ஒரு நாள் இரவு முழுதும் புளிக்க வைத்து புளித்த மாவின் இட்லியை பிட்டு எடுத்து            சட்னியோடு சேர்த்து வாயில் வைத்து                  காரம் குறைய நல்லெண்ணெய் சேர்த்து          விக்கல் வந்தால் சிறிது நீரைக் குடித்து              பஞ்சுபோல் என பாராட்டுக் கொடுத்து                பக்குவமாய் இன்னும் மூன்றை சேர்த்து            போதும் போதும் எனும்வரை சுவைத்து              கடைசியில்,                                                                  நமது ஆட்டுக்கல் இட்லி போல் இல்லையே என ஏங்க வைத்த இயந்திரக் கல்லே!

- தஞ்சை த இராமநாதன்

மலையிலும் பிள்ளையார் காட்சி

 

மலையிலும் பிள்ளையார் காட்சி 

எல்லாக் கோயில்களிலும் நுழைவு வாயிலில் இருக்கும் பிள்ளையாரிவர்                          மலை உச்சியில் விரும்பி ஏறி அங்கேயே அமர்ந்து அருள் புரியும் பிள்ளையாரிவர் 

தேவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற நாதர் சிலையை கையிறக்கி வைத்தவர்        ஓடி ஒளியப் போய் மலை உச்சியிலேயே குட்டு வாங்கி குட்டால் தலை சாய்ந்தவர்  

மலைகளை உடைத்து கோட்டைக் கட்டி கோயில்கள் கட்டியது சோழர் ஆட்சி மலைக்கோட்டையில் உயர் அற்புதமாய் கண்ணில் தெரிவதோ இறையின் காட்சி 

- தஞ்சை த இராமநாதன் 

Wednesday, 1 December 2021

பாகனின் பிடியும் களிறும்

 

பாகனின் பிடியும் களிறும்

யானை வாழ்வதும் ஆயிரம் பொன்னோடு! 

யானை இறப்பதும் ஆயிரம் பொன்னோடு!

ஆடி-ஆடி ஆடி வரும் யானை!

ஆட்டி வைக்கப்படும் யானை!

உண்டதை அசை போடாத யானை!

கண்டதை உண்ணாத சைவ யானை!

பெரிய கால்களால் மனிதனை மிதிக்கத் தெரிந்த யானை!

சிறிய மனிதனின் ஆணையை மதிக்கத் தெரிந்த யானை!

கோயில்களின் முன் நின்று வசீகரிக்கும் யானை!

பிள்ளையாராகி பிள்ளைகளை ஆசீர்வதிக்கும் யானை!

மதம் பிடிக்கவில்லையேல் அது கெத்தான யானை!

மதம் பிடித்தால் மனிதனைப் போல் பித்தான யானை!

- தஞ்சை த இராமநாதன்