Sunday, 28 September 2025

பரம்பரைக் குணம்

 

புத்திகெட்டு திமிரோடு பேசுபவனிடம் பேசினால் பேசட்டுமெனப் பேசாமல்
விட்டு விட்டால் விடாமல் பேசுகின்றான்

திமிரால் கொழுத்து கத்துபவனிடம்
கத்தவிடாமல் கெத்தோடுப் பேசினால் குருடனைப் போல் பார்க்கின்றான்

வாயால் கெட்டு வாங்கிக்கொண்டவன்
அர்த்தமற்ற ராத்திரியில் குடையைப் பிடித்துத் திருடனைப் போல் திரிகின்றான்

பார்க்காத அளவு பணம் பார்ப்பவன்          பார்க்கும் பார்வையாலேயே பறந்தாலும்          பறக்க முடியாத குருவி ஆகின்றான்

பம்பரமாய்ச் சுற்றிப் பலவாறு ஆடம்பரம் செய்து சாயத்தைப் பூசி ஆடினாலும் பரம்பரைக் குணத்தோடு வாழ்கின்றான்!

- தஞ்சை த.இராமநாதன்

Friday, 26 September 2025

ஒரே கல்லில் பல மாங்காய்

 

குறிப் பார்த்து அடித்தால் ஒரே அடியில் பல மாங்காய் விழுவதைக் கண்டோம்
உடையாது மாங்காய் விழுந்தாலும் உடைத்து உப்பிட்டு உண்டோம்

குறிப் பார்த்து அடித்த அடுத்த நொடியில் பழ மாங்கனி விழுவதையும் கண்டோம்
பட்ட மணலை வாயில் படாதவாறு ஊதிக் கழுவி சுவைத்து உண்டோம்

கல்லையும் மறந்து மரத்தையும் துறந்து கடல் கடந்து வானில் பறந்து வந்தோம்
வந்தாலும் வந்த பாதையை மறக்காது கல்லோடு மாங்காயைப் பாட வந்தோம்

மண்ணை மறந்தது மறந்ததாக இருந்து விண்ணில் பறப்பது தொடர்வதாக இருந்தால்
அது மண்ணில் வாழ்வோருக்கு விருந்தாக இருந்தால்
அவர்கள் மண்ணின் மணமுள்ள மைந்தர்களாக இருக்க முடியுமா?

- தஞ்சை த.இராமநாதன்

Tuesday, 9 September 2025

அப்பாவிகளிடையே பாவிகள்

 

சோகம் தன்னுள் சுகமாகக் குடிக்  கொண்டு விட்டால்                                                        சோகம்தான் சுகமெனத் தானே முடிவு செய்தல்தான் விதியோ?

சுகம் தன்னுள் யுகமாகக் குடிக்  கொண்டு விட்டால்                                                            சுகம்தான் நிலையெனத் தானே முடிவு செய்தல்தான் மதியோ?

வாழ்ந்தது போதுமெனச் சோர்ந்தே வாழும் வாழ்வு சோகமான வாழ்வுமில்லை வாழும்போதே சேர்ந்து வாழாது வாழும் வாழ்வு சுகமான வாழ்வுமில்லை

பணத்திற்காகப் பாசத்தை இழந்தோர்க்குப் பாவம் பண்ணிய மாசான வாழ்க்கை பாசத்திற்காகப் பணத்தை இழந்தார்க்கோ சாபம் பிண்ணிய மோசமான வாழ்க்கை

பாவப்பட்ட பலதரப்பட்ட அப்பாவிகள்  கண்ணியமாகக் கரைச் சேரட்டும்                  பாவம் செய்தே பழக்கப்பட்ட பாவிகள்  புண்ணியமானப் பேரைச் சேர்க்கட்டும்!

தஞ்சை த.இராமநாதன்

Sunday, 7 September 2025

காந்தி கண்ணாடி

 

காலக் கண்ணாடி நம் கண்முன் ஓடி நினைவுகளைக் காட்டும் பின்னாடி
வயதாகிப் பார்க்கும் நிலைக் கண்ணாடி
நினைவுகளைக் கூட்டும் நம் முன்னாடி

அன்று இளமையோடு உணர்வைக் கூட்டியதோ முகம் காணும் கண்ணாடி
இன்று முதுமையோடு உண்மையைக் காட்டுவதோ அகம் காட்டும் கண்ணாடி

இளமையில் கண்ணாடி போடாது கண்ணாடியைப் பார்ப்பதில் கில்லாடி
முதுமையில் கண்ணாடிப் போட்டு கண்ணாடியைப் பார்ப்பதோ தள்ளாடி

காந்தி கண்ணாடியோடு திரளாகச் சென்று நாட்டுக்குச் சுதந்திரத்தைத் தேடினார்
இன்று திரளாக திரையரங்கம் சென்று  திரையில் காந்தி கண்ணாடியைத் தேடினர்!

- தஞ்சை த.இராமநாதன்

Tuesday, 2 September 2025

சாப்பாட்டை உண்டோர்

 

சாப்பாடு உண்டா என்றால் விருந்தே உண்டென உணவளிப்பர்
சாப்பாட்டைச் சாப்பிட்டால் உண்டதும்      உண்டதை உணவென்பர்
உண்ட களைப்பு தொண்டனுக்கும்      உண்டபின் உண்டாகுமென்பர்
உண்ட உணவு சரியில்லையாகில்      சாப்பாடே சரியில்லையென்பர்
உண்டு கொழுத்து உடம்பை வளர்த்தார் உணவில்லாரின் உணர்வை உணரார்
பகுத்து உணவை நிரவி உண்ணாதோர் உயிரின் உரிமையை உணராதார்!

- தஞ்சை த.இராமநாதன்