பழமை பெருமையை இழப்பதால் அது பழசு என்றாகி மவுசு குறைந்து விடுகிறது புதுமை பெருமையாக இருப்பதால் அது புதுசு என்றாகி பழசு மறைந்து விடுகிறது
முதுமை முடியாமை நிறைந்து வாடுவதால்
பெருசு என்றாகி ஆட்டம் முடிவாகி விடுகிறது
இளமை இறையாமை மறந்து ஆடுவதால்
இளசு என்றாகி ஆட்டம் அதிகமாகி விடுகிறது
தீ பிடித்து எரிந்து காற்றும் விரைந்தால் தீமை உண்டாகி விடுகிறது
பா வடித்து வற்றாத விருத்தமும் இருந்தால்
புலமை உண்டாகி விடுகிறது!
- தஞ்சை த.இராமநாதன்




