நாய் குரைத்தால் அடிபட வாய்ப்புண்டு; வாய் கொழுத்தால் மிதிபட வாய்ப்புண்டு.
ஆணின் ஆணவம் அழிவைத் தர வாய்ப்புண்டு;
பெண்ணின் ஆணவம் பேரழிவைத் தர வாய்ப்புண்டு.
மதி மயங்கினால் கண்டோரை எல்லாம் பேசிட வாய்ப்புண்டு;
கதி கலங்கினால் காண்பவர் எல்லாம் பேசிட வாய்ப்புண்டு.
உழைத்துப் பிழைத்தால் ஓரளவிற்கு வாழ்ந்திட வாய்ப்புண்டு;
ஏய்த்துப் பிழைத்தால் பெயரளவிற்கு வாழ்ந்திட வாய்ப்புண்டு.
- தஞ்சை த.இராமநாதன்







