அம்மியும் அரைப்பார் கும்மியும் அடிப்பார் பெண்கள்
குடுமியும் வளர்ப்பார் உருமியும் அடிப்பார் ஆண்கள்
நடவும் நடுவார் களையும் பறிப்பார் பெண்கள்
விதையும் விதைப்பார் நாற்றையும் பறிப்பார் ஆண்கள்
சாணமும் தெளிப்பார் கோலமும் இடுவார் பெண்கள்
மேழியும் பிடிப்பார் கோலியும் இடுவார் ஆண்கள்
தொன்னையிலும் உண்ணுவார் தின்னையிலும் உண்ணுவார்
அவர்கள்தான் உயர் தொழிலை செய்யும் கிராமத்து விவசாயிகள்!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment