பெருமைகள் பலவிதம்
கஷ்டப்படாது இஷ்டப்பட்டப் பொருளை பெற்றால்தான் பெற்றப் பொருளுக்கும் பெற்ற நபருக்கும் பெருமையா?
இஷ்டத்தோடு கஷ்டப்பட்டால்தான் பெற்றப் பொருளுக்கும் பெற்ற நபருக்கும் பெருமை!
வீட்டினில் தலையாயக் கடமைகளை செய்ய முயன்று மாயைப் புகழுக்காக முயற்சி செய்யாதது மட்டுமா பெருமை? பெற்றோரை முதியோர் இல்லத்தில் விட்டு விடாது மான உணர்வுடன் சேர்ந்து வாழ்வதில்தான் பெருமை!
அரையாபுரத்தார் அருகிலேயே உள்ள 108 லிங்கேஸ்வரரை வணங்கி நெல்லை பாபநாசநாதரையும் வணங்குவதில் மட்டுமா பெருமை?
தஞ்சையில் வாழ்வோர் அங்கேயேயுள்ள பிரகதீஸ்வரரையும் வணங்கி கயிலை கைலாயநாதரையும் வணங்குவதில்தான் பெருமை!
- தஞ்சை த.இராமநாதன்






