தாய்
மனம் மகிழ்ந்து சுமந்து பெற்றெடுத்தாய்
தூய அன்போடு அறிவூட்டி வளர்த்தாய்
துன்பங்களைத் துடைத்து எறிந்தாய்
வயிற்றுப் பசியைப் போக்கி வைத்தாய்
தட்டிக் கொடுத்து உற்சாகம் கொடுத்தாய் கண்டிக்க மெல்லக் குட்டவும் செய்தாய் அம்மா என்றதும் ஓடோடி வந்தாய் நோயுற்றால் கவலையோடு நொந்தாய் வயதானாலும் பாசத்தைத் தந்தாய் கணவனுக்கு பக்கப் பலமாக இருந்தாய் பேரப் பிள்ளைகளோடு நீ மகிழ்ந்தாய் பெற்றப் பிள்ளைகளுக்கு நீ அன்பைத் தாய்!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment