Wednesday, 26 August 2026

உயிரில்லாது உய்வது ஏது?

 


கொட்டோ கொட்டெனக் கொட்டிய மழையில் 
வெள்ளமாய் இருப்பதும் நீரே
பட்டாலும் படாமல் வாழையின் இலையில் ஒட்டாத 
துளியாய் இருப்பதும் நீரே

முகிலாய் இருந்து காற்றினில் தவழ்ந்து
கொட்டாமல் ஒட்டாமல் நீர் இருந்திருந்தால்
துளியாகித் தொங்காது போயிருந்தால்
தரணியில் உயிர் ஏது? உயர்வு ஏது? நீரே!

- தஞ்சை த.இராமநாதன்

No comments:

Post a Comment