Saturday, 30 April 2022

பலகோடி ஹிட்லர்கள்

 

பலகோடி ஹிட்லர்கள்

உக்ரைனில் கொல்லப்படுவது கொலை இல்லையா?
இலங்கையில் கொல்லப்பட்டது கொலை இல்லையா?

செங்கிஸ்கான் செய்த செயலுக்கு என்ன பெயர்?
உயிரோடு அடுக்கி கோபுரம் கட்டிய திமுரின் செயலுக்கு என்ன பெயர்?

உயிரோடு எரித்த ராணி மேரி I பெயர்
இரத்தக்களரி மேரி ஆனது பொய்யா?
லெனின் மற்றும் ஸ்டாலின் செய்த   கொலைச் செயல்கள் பொய்யா?

பட்டினிப் போட்டு 4 கோடி பேர்களைக் கொன்ற மாவோவைப் போற்றலாமா?
மூன்று லட்சம் பேரை கொன்றுக்
குவித்த இடி அமீனையும் போற்றலாமா?

ஓர் உயிரைக் கொன்றாலும் அவன் கொலைக்காரனே!
லட்சம் உயிரைக் கொன்றாலும் அவன் கொலைக்காரனே!

- தஞ்சை த இராமநாதன்

Friday, 29 April 2022

பாவேந்தரின் புரட்சி வெறும் கனவா?

 

பாவேந்தரின் புரட்சி வெறும் கனவா?

தமிழை அமிழ்தென்றார் பாவேந்தர்
தமிலை அமில்தென்றார் தமிழறிந்தார்

பெண்டிரை குடும்ப விளக்கென்றார்
குடும்பத்தை விலக்கென்றார் இளையர்

காதல் கடமையென்றார் பாவேந்தர்
உல்லாசம் உரிமையென்றார் இளையர்

முதுமையில் காதலென்றார் பாவேந்தர்
முதியோர் இல்லமென்றார் இளையர்

எதிர்பாராத முத்தமென்றார் பாவேந்தர்
எதிர்பார் நித்தமென்றார் இளையர்

வாழ்வோர்க்கு ஐந்து ஒழுக்கமென்றார்
இல்லாது வாழ்வோமென்றார் இளையர்

இன்பத்தை கடலென்றார் பாவேந்தர்
இன்பமே ஆடலென்றார் இளையர்

சிந்தனை சிரிக்குமென்றார் பாவேந்தர்
சிரிப்பாய் சிரிக்கின்றார் சிந்தித்தார்!

- தஞ்சை த இராமநாதன்




எறிந்ததை எடுத்தப் படம்

 

எறிந்ததை எடுத்தப் படம்

பெருங் கல்லை வீசி சிறு மாங்காயை அடித்தக் கூட்டம் ஒரு புறம்
பெருங் கல்லோடு சிறு மாங்காயைப்  பிடித்தக் கூட்டம் மறு புறம்

நடை பாதையில் கல்லை எடுத்து
அடித்த இளைஞர்கள் அதோ அங்கே
பட போதையில் செல்லை எடுத்து
பிடித்த இளைஞர்கள் இதோ இங்கே!

- தஞ்சை த இராமநாதன்


Thursday, 28 April 2022

காலியானால் காளியே

 

காலியானால் காளியே

தன்னுள் காலியென்றால் தானும் காளிதான்!

தானே காளியென்றால் தானாகக்   காலிதான்!

- தஞ்சை த இராமநாதன் 






Wednesday, 27 April 2022

நாய்-எருமை தரும் பாடம்

 

நாய்-எருமை தரும் பாடம்

எருமையாய்ப் பிறந்து பொறுமையாய் இருந்து பெருமையை அடைந்தாய்
நாயாய்ப் பிறந்து ஆடா அமைதியாய் அமர்ந்து பெருமையைத் தந்தாய்

ஒன்றோடு ஒன்றாய் கூடி நின்றாய்
காணும் கண்களைக் கூட்டிக் கவர்ந்தாய்
அகங்கார மனிதனுக்கு பாடம் தந்தாய்
வஞ்சகர்களுக்கு படிப்பினைத் தந்தாய்!

- தஞ்சை த இராமநாதன்


Tuesday, 26 April 2022

வரி அதை விவரி

 

வரி அதை விவரி

வரிக்கு வரி விலையைப் பற்றி  விவரித்தோம் நேற்று விவரமாக
வரிக்கு வரி வரியைப் பற்றி விவரிப்போம் இன்று சுருக்கமாக
வரிக்கு மேல் வரியை உயர்த்தினால்
வறியவரால் வாழ முடியுமா?
வரிக்கு வரி வாயைப் பிளந்தால்
வரியைக் குறைக்க முடியுமா?

அல்லது...
வரிக்கு மேல் வரியைக் கூட்டினால்
வடிப்பவர் கவிஞராக முடியுமா?

- தஞ்சை த இராமநாதன்


Monday, 25 April 2022

இலங்கையில் இன்னல்

 

இலங்கையில் இன்னல்

கடை வீதிக் கடை இடம் மாறிப் போச்சு
கடல் வீதியோ கடை வீதியாகிப் போச்சு
சரஸ்வதி உணவகம் பழசாய்ப் போச்சு
புது சரஸ்வதி புதுப் பெயராய்ப் போச்சு
நிலை தடம்மாறி தடுமாறிப் போச்சு
விலையோ கடலேறி தாறுமாறாய்ப் போச்சு!

- தஞ்சை த இராமநாதன்




Sunday, 24 April 2022

சம்பளமும் விலைவாசியும்

 

சம்பளமும் விலைவாசியும்

வேட்டையாட சீறிப் பாயும் சிறுத்தை வேகத்தில் விலைவாசி சீறிப் பாயலாம்
பந்தயத்தில் குதித்தோடும் குதிரையாக பெட்ரோல் விலை குதித்து ஏறலாம்
பயந்தோடும் முயலின் முழு வேகத்தில்
மின்சார விலை ஏறிப் போகலாம்

சிறுத்தை சோர்ந்துப் போய் ஓட முடியாது
ஓய்ந்துப் போகலாம்
குதிரையும் சோர்ந்துப் போய் ஓடாது சாய்ந்துப் போகலாம்
முந்த முடியாத முயலோ புதரில் புகுந்து பயந்துப் போகலாம்

நெடுந் தூரமானாலும் மாறா வேகத்தில் விவேகத்துடன் முயலும் ஆமை போல்
கிடைக்கும் வருமானத்தை வைத்து
சீரான வாழ்வை வாழ்வதில்தான் சுகம்!

- தஞ்சை த இராமநாதன்


Saturday, 23 April 2022

எது போராட்ட வாழ்வு?

 

எது போராட்ட வாழ்வு?

நாட்டினில் பிறந்து
வீட்டினில் தவழ்ந்து
தொட்டிலில் அயர்ந்து
கட்டிலில் மகிழ்ந்து
காட்டினில் மறைந்து
முடிவுக்கு வரும் மனிதயின வாழ்வு போராட்ட வாழ்வா?

காட்டினில் பிறந்து
காட்டினில் நடந்து
காட்டினில் திரிந்து
காட்டினில் மகிழ்ந்து
காட்டினில் மறைந்து
முடிவுக்கு வரும் விலங்கின வாழ்வு போராட்ட வாழ்வா?

- தஞ்சை த இராமநாதன்


தங்கக் காசு போல வாழ்க்கை

 

தங்கக் காசு போல வாழ்க்கை

தங்கக் காசு போல மனிதனின் சொல்லும் செயலும் இருந்தால்...

நிச்சயம் அம்மனிதனை தங்கமென பாதுகாத்துக் கொள்வார்கள்
நிச்சயம் அம்மனிதனை தங்கமென கொள்ளையடித்துக் கொல்வார்கள்
கிடைத்த வாய்ப்பால் தங்கமென நிச்சயம் மதிக்கச் செய்வார்கள்
வாய்ப்புக் கிடைத்தால் சிங்கமென நிச்சயம் மிதிக்கச் செய்வார்கள்!

- தஞ்சை த இராமநாதன்


Friday, 22 April 2022

பொறுமை

 

பொறுமை 

பொறுத்தார் பூமி ஆள்வாரென்றால்..
பொறுத்தாலும் பொருத்தமற்ற நபரால் அடுத்தத் தேர்தலில் வெற்றிப்பெற முடியுமா?
பொறுமை கடலினும் பெரிதென்றால்..
பொறுத்தார் தன் எண்ண அலைகளால் பொங்காமல் இருக்க முடியுமா?
பூமியைப்போல் பொறுமை வேண்டுமென்றால்..
பூமியைப்போல் வெட்டும் குத்தும் வாங்காமல் இருக்க முடியுமா?
ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுக்க வேண்டுமென்றால்..
ஆக்கி சமைத்ததை ஆற விட்டா ல்
சூடு பறக்க சாப்பிட முடியுமா?
பொறுமை பெருமை தருமென்றால்..
அந்தப் பெருமை ஏமாந்தவருக்கும் கிடைக்குமென சொல்ல முடியுமா?

வெந்ததைத் தின்று விதி வந்தபோது சாகும் பொறுமை தேவையா?
தும்பை விட்டு வாலைப் பிடித்துத் தொங்கும் பொறுமை தேவையா?
குட்டக் குட்டக் குனிந்து கழுத்தும் குட்டையாகும் பொறுமை தேவையா?

- தஞ்சை த இராமநாதன்


Thursday, 21 April 2022

உலகே மாயம்

 

உலகே மாயம்

மோசம் செய்து நாசம் செய்து
ஏய்த்துப் பிழைக்கும் உலகம்
துரோகம் செய்து விரோதம் செய்து கொலை செய்யும் உலகம்
குண்டைப் போட்டு சண்டைப் போட்டு கொன்று குவிக்கும் உலகம்
நிறம் பார்த்து நிலம் பார்த்து மக்களை வேறுபடுத்தும் உலகம்
சாதகமான காலம் பார்த்து நேரம் பார்த்து சமயத்தைப் பரப்பும் உலகம்
உழைத்துத் தின்று சமைத்துத் தின்று
உறுதியுடன் வாழ்ந்த உலகம்
நெருப்பைத் தின்று நெறியைக் கொன்று
அழியப் போகும் உலகம்!

- தஞ்சை த இராமநாதன்


Wednesday, 20 April 2022

நிலவில் காதல்

 

நிலவில் காதல்

நிலவை சுற்றிச் சுற்றி வந்திடும் முகிலே சுற்றியும் காதல் கை கூடலியா?
நிலவை தழுவித் தழுவி ஓடிடும் முகிலே
தழுவியும் காதல் கை கூடலியா?

மரமே...
நிலா விழுமென எண்ணி கிளையால் தாங்கிப் பிடிக்க நிற்கிறாயா?
அல்லது..
கிளையின் துணை கொண்டு நிலவை விழாதுப் பிடிக்க தூங்காது நிற்கிறாயா?

- தஞ்சை த இராமநாதன்


Tuesday, 19 April 2022

அழகான மலர்கள்

 

அழகான மலர்கள்

மலர்ந்த மலரின் மணமும் அழகு
சிரித்த மழலையின் மனமும் அழகு
இதழ் விரிந்து மலர்ந்த நிறத்தில் அழகு
இதழ் விரிந்து சிரித்த முகத்தில் அழகு
கண் விழித்து ரசிக்கும் மலரும் அழகு
கண் மூடி சிரிக்கும் மழலையும் அழகு!

- தஞ்சை த.இராமநாதன்


Sunday, 17 April 2022

மரமும் நாமும்

 

மரமும் நாமும்

மரம் நடுவதை வேடிக்கை ஆக்க வேண்டாம்
மரம் நடுவதை வாடிக்கை ஆக்க வேண்டும்

மரம் நட பல வண்ணத் துணிகள் வேண்டாம்
மரம் நட பல எண்ணப் பணிகள் வேண்டும்

மரம் நட்டு படம் எடுப்போர்க்கு விளம்பரம் வேண்டும்
மரம் நட்டு இடம் காப்போர்க்கு விளம்பரம் வேண்டாம்

இதில்,
நாம் யாரென நமக்குத் தெரியும்!    யாராயினும், மரத்தை நடுவது நலமே!

- தஞ்சை த இராமநாதன்


உடனே வேண்டும்

 

உடனே வேண்டும்

பாதை மாறிப் போகும் பிள்ளையர்களை
உடனே கண்டிக்க வேண்டும்
பாதையை மாற்றும் தொல்லையர்களை உடனே தண்டிக்க வேண்டும்
படிக்காது படித்தவர் போல் நடிப்பவரை
உடனே தடுக்க வேண்டும்
மேடைதோறும் அளவற்றுப் பேசுபவரை
உடனே அடக்க வேண்டும்
நாள்தோறும் ஊரை ஏமாற்றுபவரை
உடனே ஒதுக்க வேண்டும்
இரக்கமற்ற கொடும் ஈனப் பண்பினரை
உடனே உதைக்க வேண்டும்
பணத்திற்காக பல வேஷம் போடுபவரை
உடனே வதைக்க வேண்டும்
சுகத்திற்காக பெற்றோரை மறப்போரை
உடனே திருத்த வேண்டும்

மாற்றத்தை செய்யத் தகுந்த மானிடரை
....இயற்கை....
உடனே ஆசீர்வதிக்க வேண்டும்!

- தஞ்சை த இராமநாதன்


Saturday, 16 April 2022

கையோடு கையாக மரத்தை வை

 

கையோடு கையாக மரத்தை வை

மரத்தை நாம் வளர்ப்போம் என்ற தனது தளராத தன்னம்பிக்கை
மரத்தை நாம் காப்போம் என்ற தனது      விடாத நன் நம்பிக்கை! 

கையால் கையை வரைந்தக் கையோடு
பூமியையும் தூக்கி வரைந்தக் கை!
கையால் நீரூற்றும் அந்தக் கையோடு கைகளைச் சேர்த்தும் வரைந்தக் கை!

- தஞ்சை த இராமநாதன்


Friday, 15 April 2022

இயற்கையின் எதிர் வினை

 

இயற்கையின் எதிர் வினை 

தீயை வைத்து தீவைக் கொளுத்தினார்
ஆஞ்சநேயர் அது அன்று
தீய வினையால் தீவை வஞ்சித்தினர் சுயநலத்தினர் இது இன்று

தான் செய்த வினை தன் சந்ததியினை என்றாவது கொல்லும் அது அன்று
தான் செய்த வினை தன் சந்ததியினை 
இன்றே கொல்லும் இது இன்று

சுடப்பட்டு இறந்தோரின் கண்ணீரோடு இரத்தம் கடலுடன் கலந்தது அது அன்று
கஷ்டப்பட்டு இரப்போரின் கண்ணீரோடு சத்தம் காற்றுடன் கலப்பது இது இன்று

மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது
மாறும் மாற்றம் இன்றும் தேவையானது
அடிப்படைத் தேவை என்றும் அவசியம்
அன்றாடத் தேவை இன்றும் அவசியம்

தீமை அகன்று நன்மைப் பெருகட்டும்!
அங்கும் இங்கும் எங்கும் எவருக்கும்!!

- தஞ்சை த இராமநாதன்


அங்கீகரிக்கப்படாத அம்பேத்கர்

அங்கீகரிக்கப்படாத அம்பேத்கர்

உலகளவில் அறிவோடு பல பட்டங்களைப் பெற்றார்
இந்தியளவில் உணர்வோடு  பல கஷ்டங்களைப் பெற்றார்

இருக்கும்போது இந்தியத் தேர்தலில் அவருக்கு பாடத்தைக் கொடுத்தனர்
இல்லாதபோது இந்தியத் தேர்தலில்
அவரின் படத்தை போட்டுக் கெடுத்தனர்

அவர் பிறந்து வளர்ந்து இருந்தபோது இருந்த மதம் வேறு
அவர் துறந்து இறந்து மறைந்தபோது இருந்த மதம் வேறு

படிக்காதப் பேதைகள் அம்பேத்கரை நம்மவர் என்பதை நிறுத்த வேண்டும்
மதவெறிப் பதர்கள் அம்பேத்கரை நம்மவர் என்பதையும் நிறுத்த வேண்டும்!

- தஞ்சை த இராமநாதன் 


Thursday, 14 April 2022

முத்திரையைப் பதித்திடு சித்திரையே!

 

கொளுத்தும் வெயிலைத் தணிக்கக்
குளிர்விக்கும் மழையாய் வருக சித்திரையே
வாட்டும் வறுமை நிலையைப் போக்க நல்ல விளைச்சலைத் தருக சித்திரையே 

உண்மையான மெய்யுணர்வைக் காக்கப்
பொய்யை உடனே அகற்றிடு சித்திரையே
வேடதாரிகள் முகத்திரையைக் கலைக்க அனுபவப் பாடத்தைப் புகட்டிடு சித்திரையே 

நல்லேறு பொன்னேறு பூட்டி உழைக்கப் புதுமையோடு பழமையைத் தந்திடு சித்திரையே
நல்ல நாளில் கொண்டாடிக் குதூகலிக்கப்
புத்தி கலந்த பக்தியைத் தந்திடு சித்திரையே

கோடைக்கு ஏற்ற குளிர்தரு மரங்கள்
எங்கெங்கும் இருக்க இடம் தந்திடு சித்திரையே
இடையிடையே இடியோடு கலந்த மழை
பொழிய அருள் தந்திடு சித்திரையே 

அதை இதை தையத் தக்காவென கத்துவோர்
கத்தியைத் தூக்கினாலும் சித்திரைதான் முதல் மாதமென முத்திரையில் பதித்திடு சித்திரையே!

- தஞ்சை த.இராமநாதன்

Wednesday, 13 April 2022

பட்டுக்கோட்டையார் பார்வையில்...

 

பட்டுக்கோட்டையார் பார்வையில்...

பொய்யான மாயப் பேய்களைப் பாட்டில் சொன்னேனே!
மெய்யான மனிதப் பேய்கள் நாட்டில் வந்ததேனோ?
திருடாதே திருடாதே என்று அன்றே சொன்னேனே!
திருடித் திருடி சேர்த்திடு அதுவும் இன்றே என்றானதேனோ?
தூங்காதே தூங்காதே என்று முன்னே சொன்னேனே!
தூங்காது தூங்காது கேபேசி முன்னே என்றானதேனோ?
பகுத்தறிவோடு படிப்பறிவைச் சேர்த்துச் சொன்னேனே!
அறிவும் படிப்பும் பணத்தோடு சேர்ந்தது
என்றானதேனோ?

- தஞ்சை த இராமநாதன்


கொக்கா? மக்கா?

 

கொக்கா? மக்கா?

வரும் மீனை வந்தவுடன் கொத்திக் கொள் கொக்கே!
வந்த மீனை விட்டுவிட்டு மறு மீன் வருமென இருந்தால்....
மடையான் ஆகிவிடுவாய் மக்கே!

- தஞ்சை த இராமநாதன்


Tuesday, 12 April 2022

சித்திரையில் மட்டுமா நித்திரை?

 

சித்திரையில் மட்டுமா நித்திரை?

தூங்கும் இனமென தன்மான தமிழினத்தைத் தாக்கிப் பேசுபவன் தமிழனாக இருக்க முடியுமா?

சித்திரைக்கு சித்திரை நித்திரையை நினைவூட்டி தமிழனைத் தாக்குபவன் தமிழனாக இருக்க முடியுமா?

- தஞ்சை த இராமநாதன்


Sunday, 10 April 2022

எது உருப்படியான வேலை?

 

எது உருப்படியான வேலை?

மண்ணை வெட்டி ஆறடிக்கு மேல் தூக்கி
வரப்பில் போட்டால் அது வேலை
நாற்றைப் பறிக்க குனிந்து வளைந்து வேலைப் பார்த்தால் அது வேலை
நாற்றுக் கட்டை நாற்றங்கால் முதல் நடவு வயல் வரை சுமந்தால் அது வேலை
கூடையில் உரத்தை தூக்கிக் கொண்டு மறு கையில் வீசினால் அது வேலை
வயலில் இறங்கி நடந்து களைகளைப் பறித்தால் அது அர்த்தமுள்ள வேலை
கதிர் அரிவாளோடு விளைந்தக் கதிரை அறுத்தால் அது அறிவுள்ள வேலை
கையை சுழற்றி களத்தில் நெல் கதிரை
அடித்தால் அது பலன்மிக்க வேலை    மரக்கால் படி கொண்டு நெல் அரிசியை அளந்தால் அது பழக்கப்பட்ட வேலை!

- தஞ்சை த இராமநாதன்


Saturday, 9 April 2022

கூண்டோடு சிறைவாசம்

 

கூண்டோடு சிறைவாசம்

கூண்டில் அடைபட்டக் குருவியெல்லாம் கூண்டை விட்டு கூண்டோடு வனவாசம்
வீட்டினுள் அடைபட்ட இளசெல்லாம்
வீட்டில் கைபேசியோடு சிறைவாசம்!

- தஞ்சை த இராமநாதன்


Friday, 8 April 2022

அடிக்கு அடி அதிரடி

 

அடிக்கு அடி  அதிரடி

காய்த்த மரத்தை கல்லால் அடிப்பது காய்ப்பை உயர்த்தத்தான் என்பதா?
தனி மனிதனைக் கல்லால் அடிப்பதும்
அவரை உயர வைக்கத்தான் என்பதா?

குட்டக் குட்டக் குனிந்தால் குட்டுபவன் குட்டை குட்டிக் கொண்டே இருப்பான்
கையைத் தட்டத் தட்ட பேசிப் பிதற்றுபவன்  பித்தலாட்டத்தை தொடரவே செய்வான்

அடங்கி அடங்கிப் போனால் அடக்கம் செய்யத் துடித்திடும் திருட்டு உலகமிது
ஒதுங்கி ஒதுங்கிப் போனால் முடக்கம் செய்யத் துணிந்திடும் முரட்டு உலகமிது!

- தஞ்சை த இராமநாதன்


Thursday, 7 April 2022

இமை கண்ணைக் காப்பது போல

 

இமை கண்ணைக் காப்பது போல

கோழி தன் குஞ்சுகளைக் காப்பது
இமை கண்ணைக் காப்பது போல
நாய் தன் குட்டிகளைக் காப்பது
இமை கண்ணைக் காப்பது போல
மாடுகள் தன் கன்றுகளைக் காப்பது
இமை கண்ணைக் காப்பது போல
தேனீக்கள் தன் கூட்டைக் காப்பது
இமை கண்ணைக் காப்பது போல
கங்காரு தன் குட்டியைச் சுமப்பது
இமை கண்ணைக் காப்பது போல
பூவை மொட்டு மூடிக் காப்பது
இமை கண்ணைக் காப்பது போல
தாய் தன் பிள்ளைகளைக் காப்பது
இமை கண்ணைக் காப்பது போல
இவை யாவும் இயற்கையாக நடந்தால் நன்றே!

நாட்டுத் தலைவர்கள் நாட்டைக் காப்பது
இமை கண்ணைக் காப்பது போல
ல ள ழ உச்சரிப்போடு தமிழைக் காப்பது
இமை கண்ணைக் காப்பது போல
இவை யாவும் முறையாக நடந்தால் நன்றே!

தஞ்சை த இராமநாதன்


Wednesday, 6 April 2022

கறிமேல் மட்டும்தான் குறியா?

 

கறிமேல் மட்டும்தான் குறியா?

உயிரினத்தின் தூலவுடல் பற்றி சொன்னவன் மாமனிதன்
உயிரினத்தின் நுண்ணுடல் பற்றி சொன்னவன் மாமனிதன்
உயிரினத்தின் காரணவுடல் பற்றி சொன்னவன் மாமனிதன்

ஆடு செத்தால் விலைமிகுக் கறியாம்
மாடு செத்தாலும் விலைமிகுக் கறியாம்
மனிதக் கறிக்கு விலையே இல்லையாம்
சொல்பவன் மானங்கெட்ட மனிதனோ?

- தஞ்சை த இராமநாதன்


Tuesday, 5 April 2022

காதுக்குக் கேட்காத உணர்வொலி

 

காதுக்குக் கேட்காத உணர்வொலி

நீ வேண்டாமென அழுதபோது - நான்
வேண்டுமென அனுப்பி வைத்தேன்
நான் வேண்டாமென அழும்போது
நீயும் வேண்டாமென நினைத்தாயோ?
நீ அடம் பிடித்து அழுதபோது - உனக்கு ஆறுதலாய் இருந்தாங்க உங்கம்மா
நான் அடம் பிடிக்காது அழும்போது        எனக்கு ஆறுதலாய் இருப்பார் யாரப்பா?
வீட்டில் இறந்து எனது உயிரைவிட கொடுப்பினை இல்லாது போனதப்பா
அம்மா சென்றயிடம் சென்று சேர்ந்ததும்        அப்பா அழாது ஆசீர்வதிப்பேனப்பா!

தஞ்சை த இராமநாதன்


Monday, 4 April 2022

நம்ம ஊர் பானகம்

 

நம்ம ஊர் பானகம்

சிறு வெள்ளத்தை பானையில் எடுத்து பனை வெல்லத்தை சிறிதாக உடைத்து
வெள்ளத்தில் வெல்லத்தைக் கரைத்து
எலுமிச்சை சாறைப் பிளிந்து சேர்த்து
சுக்கு சுக்காய் சுக்கை நறுக்கி வைத்து
ஏலக்காய் ஜாதிக்காயை இணைத்து
உப்பை அளவோடு அள்ளித் தெளித்து
அனைத்தையும் பக்குவமாய்க் கலந்து
கலவையை துணிக் கொண்டு வடித்து
துளசியைத் தூவிக் குடித்தால் சத்து!

- தஞ்சை த இராமநாதன்


Sunday, 3 April 2022

மலை ரயில்

 

மலை ரயில்

அடிவாரத்திலே தொடும் தூரத்திலே
மலையைக் கடந்துப் போகும் ரயில்

மழைத் தூறலிலே மழைச் சாரலிலே
புகையைப் போக்கிப் போகும் ரயில்

குகைக்குள்ளே கும் இருட்டுனிலே 
தடம் மாறாது செல்லும் ரயில்

ரயிலுக்குள்ளே குதூகல சத்தத்திலே
சிக்கு புக்குவென தாளமிடம் இரயில்!

- தஞ்சை த இராமநாதன்


Saturday, 2 April 2022

கனிந்து இனிந்தக் காதல்

 

கனிந்து இனிந்தக் காதல்

மண்டியிட்டு மலர்ந்த பூவைக் கொடுத்து மட்டில்லா மகிழ்வுடன் மலர்ந்தக் காதல்
பூவைத் தொடுத்து பூவையைப் பிடித்து
பூவின் மணத்தொடு மனம் ஒத்தக் காதல்

வயதானாலும் மணநாளில் மணவாளன்  மலர் கொடுக்கும் கனிந்தக் காதல்
முதிர்ந்து தொடர்ந்தக் காதலால் மணவாளி முகம் சிவந்து இனிந்தக் காதல்!

- தஞ்சை த இராமநாதன்


Friday, 1 April 2022

குரங்கிடம் மனிதப் பண்புகள்

 

குரங்கிடம் மனிதப் பண்புகள்

ஆபத்தில் உதவுவது மனிதப் பண்பு      அதைக் குரங்கிடம் காண்கிறோம்                        கை கொடுத்துக் காப்பது மனிதப் பண்பு அதைக் குரங்கிடம் காண்கிறோம் பிள்ளையைக் காப்பது மனிதப் பண்பு                அதைக் குரங்கிடம் காண்கிறோம் கண்டிப்போடு இருப்பது மனிதப் பண்பு அதைக் குரங்கிடம் காண்கிறோம்      சிலநேரம் சினப்படுவது மனிதப் பண்பு அதைக் குரங்கிடம் காண்கிறோம்        பகிர்ந்து வாழ்வது மனிதப் பண்பு          அதைக் குரங்கிடம் காண்கிறோம் மகிழ்வோடு வாழ்வது மனிதப் பண்பு                  அதைக் குரங்கிடம் காண்கிறோம்!

- தஞ்சை த இராமநாதன்