சிறுமியின் பலமான நம்பிக்கை
நம்பிக்கையோடு தும்பிக்கையைப்
பிடித்ததால் பலமாகவேப் பிடித்தாள் பலமான தும்பிக்கையைப் பிடித்ததால் தன்னம்பிக்கையோடுப் பிடித்தாள்!
- தஞ்சை த இராமநாதன்
சிறுமியின் பலமான நம்பிக்கை
நம்பிக்கையோடு தும்பிக்கையைப்
பிடித்ததால் பலமாகவேப் பிடித்தாள் பலமான தும்பிக்கையைப் பிடித்ததால் தன்னம்பிக்கையோடுப் பிடித்தாள்!
- தஞ்சை த இராமநாதன்
பிடி பை வைத்துப் பிடிக்கும் புதுமை
மாசோடும் காசோடும் போராடி அழியும் மானிட வர்க்கமே
வலையோடும் தூண்டிலோடும் அழித்த மானிட வர்க்கமே
கையோடும் பறியோடும் எமைப் பிடித்த மானிட வர்க்கமே
Wifiயில் பிடிபட்டு பிடி பை வைத்த மானிட வர்க்கமே!
- தஞ்சை த இராமநாதன்
இவர்தான் கண்ணதாசன்
எண்ணியதை எண்ணியபடியே எழுதியவர் கண்ணதாசன்
எழுதியதை எழுதியபடியே சொன்னவர் கண்ணதாசன்
சொன்னதை சொன்னபடியே செய்தவர் கண்ணதாசன்
திராவிடம் பேசி உணர்வைக் கூட்டி உரைத்தவர் கண்ணதாசன்
ஆன்மிகம் பேசி அறிவைக் காட்டி நிரூபித்தவர் கண்ணதாசன்!
- தஞ்சை த இராமநாதன்
ஆக்கி அழிக்கும் ஆற்றல்
தொடந்து எரிபொருள் எரிந்து பயணம் தொடர்ந்து தொடர்ந்தால் தொடர் வண்டி
தொடர்ந்து தொடர் வண்டியே தீ பிடித்து தொடர்ந்து எரிந்தால் அது இடர் வண்டி
தொடர்ந்து தொடர் வண்டி ஓட்டம் தொடர
தொடர்ந்து எரிபொருள் எரிய வேண்டும்
தொடர்ந்து எரியும் விபத்தைத் தடுக்க
தொடர்ந்து பழுது பார்க்க வேண்டும்!
- தஞ்சை த இராமநாதன்
பசுமைக்காக புரட்சி செய்வோம்
கடுமையான வறட்சியின் தாக்கத்தால் வருந்துவதை நிறுத்த வேண்டும்
பசுமையான புரட்சியின் ஆக்கத்தால் திருந்துவதை நிலை நிறுத்த வேண்டும்!
- தஞ்சை த இராமநாதன்
கனவு நனவாகட்டும்
நிலவிலே நினைவாலே வீடு கட்டி முடித்தால் அது கனவு
நிலவின் நினைவாலே வீடு கட்டி முடித்தால் அது நனவு!
- தஞ்சை த இராமநாதன்
அணி மாறுவதுதான் அரசியலா?
கிளியாரே கிளியாரே கிலிமாற அணிலாரைப் பார்க்கின்றாயோ?
அணிலாரே அணிலாரே அணிமாறி அரசியலாக்கப் பார்க்கின்றாயோ?
- தஞ்சை த இராமநாதன்
மரமேறும் மறமும் மரபும்
மரமேறும் மறத்தின் மரபோடு மரத்தைக் காத்தால் தன்மானத்தின் சிங்கம்
மதம்மாறும் குணத்தோடு மரபைக் கெடுத்தால் அவமானத்தின் அசிங்கம்!
- தஞ்சை த இராமநாதன்
கையைக் கொடுத்துக் கெடுப்போர்
கையைக் கொடுத்து கையூட்டையும் கொடுத்து கெடாவிட்டாலும் கெட்டவரே
கையைக் கொடுத்து கையூட்டையும் தடுத்து கெட்டாலும் நல்லவரே
பல்லைக் காட்டி படித்தவாறே கையூட்டை வாங்கும் படித்தவரும் கெட்டவரே
சுட்டிக் காட்டி சுட்டியயவாறே கையூட்டை
மறுக்கும் படிக்காதவரும் நல்லவரே!
- தஞ்சை த இராமநாதன்
புளிக்காதது புளியா?
புளிக்குமென புளியைப் புசித்தால் புசிக்குமுன் இனித்தால் அது புளியா?
புசிக்காதென புல்லைக் கொடுத்தால்
புசித்தபின் உறுமினால் அது புலியா?
- தஞ்சை த இராமநாதன்
மகிழ்வான தருணம்
மணந்தவளை மணந்தவர் மதித்து
முதிர்ந்த வயதிலும் முயன்று மிதித்து மதித்தக் கணவனின் காலால் மிதித்து மெதுவானப் பயணத்தை நினைத்து மகிழ்வுக் கூடுகிறது மனம் திளைத்து!
- தஞ்சை த இராமநாதன்
சிரிப்பின் மகிமை
சுமையை சுமையாகக் கருதாது செமையாகத் தூக்குவது சிறப்பு சுமையை சுமையாகப் பாராது சுமையை மறக்கடிப்பது சிரிப்பு!
- தஞ்சை த இராமநாதன்
மாம்பழத்தின் குரல்
பூத்துக் காய்த்துத் தேறியதால்
உலுக்கி உலுக்கிப் பறிக்கப்பட்டேன் பறிக்கப்பட்டக் காம்பின் காயத்தால் பாலைக் கண்ணீராக வடித்தேன்
இயற்கையாகப் பழுக்கும் முன்பே செயற்கைக்கு உள்ளாக்கப்பட்டேன்
பழுத்துப் பலநாள் ஆகியும் சிலநாள் பரிதாபமாய் தட்டில் வைக்கப்பட்டேன் பறிக்கப்பட்டு தட்டில் விடப்பட்ட வரை காட்சிப் பொருளாக ஆக்கப்பட்டேன்
எப்போது வெட்டி அரிவார்கள் என்ற நினைவோடு காக்க வைக்கப்பட்டேன்
அரியாமல் எறிவார்களோ என அறியும் வலியால் அழாமல் அழுக விடப்பட்டேன்!
- தஞ்சை த இராமநாதன்
செருக்கெனும் கிறுக்கு இருக்கு
மண்ணை நம்பி மரம் இருக்கு
மரத்தை நம்பி கிளைகள் இருக்கு!
கிளைகளை நம்பி இலைகள் இருக்கு
இலைகளை நம்பி உயிர்கள் இருக்கு!
இயற்கையை நம்பி யாவும் இருக்கு
தானென்ற செருக்கு நமக்கு எதற்கு?
- தஞ்சை த இராமநாதன்
எது சிறந்த நட்பு?
உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண் களையும் நட்பு சிறந்ததா?
மானமிழந்து மதிகெட்டுப் போன நன்றி கெட்ட நயவஞ்சர்கள் நட்பு சிறந்ததா?
உதவியைச் செய்ய ஓடோடி வரும் நட்பு சிறந்ததா?
உதவியைப் பெற தேடோடி வரும் நட்பு சிறந்ததா?
நிலையற்ற உடலின்பால் நட்புக் கொள்வது சிறந்ததா? நிலையான உள்ளத்தின்பால் நட்புக் கொள்வது சிறந்ததா? எண்ணிய ஆடையோடு ஓடிப் போகும் நட்பு சிறந்ததா? பின்னிய சடையோடு கூடிப் போகும் நட்பு சிறந்ததா?
- தஞ்சை த இராமநாதன்
மாசற்ற உலகம் வேண்டும்
ஒரு நாள் போதுமா?
ஒரே ஒரு நாள் போதுமா?
உலக சுற்று சூழலைப் பாதுகாக்க
ஒரே நாள் போதுமா?
நிலம் நீர் காற்றைப் பாதுகாக்க மாசற்ற சுற்றுச் சூழல் வேண்டும் மாசுடைய மானிடரினுள் மாசு நீங்க மாசற்ற மனச் சூழல் வேண்டும்!
- தஞ்சை த இராமநாதன்
சும்மாடு அதுதான் பண்பாடு
சும்மாடுக் கட்டோ சுமையைத் தூக்க
முந்தானைக் கட்டோ மகவைத் தூக்க
தலையில் சுமையோ பசியைப் போக்க
இடுப்பில் சுமையோ வம்சத்தைக் காக்க
செருப்பில்லா நடை சாலையைக் கடக்குது
செருக்கில்லா உடை மானத்தைக் காக்குது!
- தஞ்சை த இராமநாதன்
அடிப்படை விதி
மிதித்தால்தான் ஓட்ட முடியும் என்பது மிதிப்பவரின் தலை விதி
மிதிப்பட்டால்தான் ஓட முடியும் என்பது மிதிவண்டியின் தலை விதி
மிதித்து சட்டென ஓட்டினேன் என்பதும் மிதிப்பட்டு பட்டென ஓடினேன் என்பதும்
அடைப்பட்ட காற்றின் அடிப்படை விதி!
- தஞ்சை த இராமநாதன்
செங்காய்
ஆசை பெரிதானால் அது பேராசை
அதை அடைவதில் பலருக்கு இஷ்டமே
இன்பம் அகமானால் அது பேரின்பம்
அதை அடைவதில் பலருக்கு கஷ்டமே
கொத்தாய்க் காய்த்த பேரீச்சைதன் செங்காயை சுவைத்தால் அதிஷ்டமே
நன்றி மறந்து நாயளவு கூட வாழாது போனால் வாழ்வே பெரும் நஷ்டமே!
- தஞ்சை த இராமநாதன்