செங்காய்
ஆசை பெரிதானால் அது பேராசை
அதை அடைவதில் பலருக்கு இஷ்டமே
இன்பம் அகமானால் அது பேரின்பம்
அதை அடைவதில் பலருக்கு கஷ்டமே
கொத்தாய்க் காய்த்த பேரீச்சைதன் செங்காயை சுவைத்தால் அதிஷ்டமே
நன்றி மறந்து நாயளவு கூட வாழாது போனால் வாழ்வே பெரும் நஷ்டமே!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment