Wednesday, 31 August 2022

தன்னைத் தானே பார்த்தல்

 

தன்னைத் தானே பார்த்தல்

பூனையின் பிம்பம் புலியாகத் தெரியலாம்
புலியின் பிம்பம் கிலியைத் தருவதாகத் தெரியலாம்
சிங்கத்தின் பிம்பம் அசிங்கமாகத் தெரியலாம்
அசிங்கத்தின் ஜம்பம் சிங்கமாகக் கூடத்
தெரியலாம்
மனிதனின் அங்கம் அசல் குரங்காகத் தெரியலாம்
குரங்கின் பிம்பம் மனிதனாகக் கூடத்
தெரியலாம்
புறத்தின் கண்ணாடியில் முகம்
அழகாகத் தெரியலாம்
அகத்தின் கண்ணாடியில் அகம் அசிங்கமாகத் தெரியலாம்!

- தஞ்சை த இராமநாதன் 




பாதுகாப்பென்பது யாதெனில்...

 

பாதுகாப்பென்பது யாதெனில்...

ஆட்களின் தவறால் ஆபத்து இல்லாது வேலை நடந்தால் அது பாதுகாப்பு
இடத்தால் காயமோ இறப்போ இல்லாது
வேலை நடந்தால் அதுவும் பாதுகாப்பு

சமதளத்தில் நடந்து தடுக்கி வழுக்கி விழாமல் நடந்தால் அது பாதுகாப்பு
பொருளோ ஆளோ கீழே விழாது வேலை செய்தால் அதுவும் பாதுகாப்பு

மேற்பார்வை தொடர்ந்து இருந்தால் அது நிர்வாகத் திறமையினால் பாதுகாப்பு
இடரைத் தடுக்க உயர்நிலை கட்டுப்பாடு இருந்தால் அதுவும் பாதுகாப்பு!

- தஞ்சை த இராமநாதன்


Tuesday, 30 August 2022

என் பெரியம்மா

 

என் பெரியம்மா (இறப்பு: 29-08-2022)

அம்மா வீட்டில் பிறந்த பெரியம்மா
பாட்டன் வீட்டில் வாழ்ந்த பெரியம்மா
அம்மணியின் மூத்த மகள் பெரியம்மா
அய்யாவின் செல்ல மகள் பெரியம்மா
இரு தம்பிகளுக்குத் தெம்பு பெரியம்மா
இரு தங்கைகளுக்குப் பலம் பெரியம்மா
அக்காயியின் அம்மா என் பெரியம்மா
அண்ணய்யாவின் அம்மா என் பெரியம்மா
மாரியம்மாவின் அம்மா என் பெரியம்மா
பேரப் பிள்ளைகளுக்குப் பிடித்தவர் என் பெரியம்மா!

நகைச் சுவை பல அறிந்த பெரியம்மா
நகைகள் பல அணிந்த பெரியம்மா
இங்கிருந்து உறவுகளை இணைத்து வைத்து ஆசீர்வதித்தப் பெரியம்மா                    எங்கிருந்தாலும் எங்களை இணைத்து வைத்தே ஆசீர்வதியுங்கள் பெரியம்மா!

- தஞ்சை த இராமநாதன்


Sunday, 28 August 2022

தீயது யாதெனில்...

 

தீயது யாதெனில்...

எரிபொருள் ஆக்ஸிஜன் வெப்பமென முக்கோணத்தில் வந்தால் பிடிக்கும் தீ
இம்மூன்றும் எக்கோணத்தில் வந்தாலும் அக்கோணத்திலும் பிடிக்கும் தீ
மூன்றும் சேர்ந்தாலும் பொருளின் எரி வெப்ப நிலை வந்தால்தான் பிடிக்கும் தீ
எரியும்போது காற்றடித்தால் ஆக்ஸிஜன்
அதிகரிப்பால் பிடிக்கும் பெருந் தீ
முக்கோணப் பிணைப்பை உடைத்தால்
உடனே நின்றுவிடும் பிடித்தத் தீ
பிணைப்பை முன்கூட்டியே தடுத்தால் பிடிக்காது தடுக்கப்படும் தீ!

- தஞ்சை த இராமநாதன்


Friday, 26 August 2022

நேசிக்காமல் அன்னையாக முடியுமா?

 

நேசிக்காமல் அன்னையாக முடியுமா?

பலரைப் பெற்றெடுத்து                                            அன்னையானோர் பலபேர்
சிலரைக்கூட பெற்றெடுக்காது
அன்னையானோர் சிலபேர்
இவர்களெல்லாம் அன்னையாயென
பெயரெடுத்தோர் பலபேர்
இவர்கள்தான் அன்னையென பெயரெடுத்தோர் சிலபேர்
அன்னைகளுக்கு அன்னையானபின் பாட்டியாகி இறந்தோர் பலபேர்
அனாதைகளுக்கும் அன்னையாகி                      பாடமாகி இறந்தோர் சிலபேர்!

- தஞ்சை த இராமநாதன்


Thursday, 25 August 2022

யார் மேதை? யார் பேதை?

 

யார் மேதை? யார் பேதை?

பேதைகள் நிறைந்து விட்டதால்                            மேதைகள் குறைந்து விட்டனரா?
மேதைகள் குறைந்து விட்டதால்
பேதைகள் நிறைந்து விட்டனரா?

தெரியாததையும் புரியம்படி சொன்னால் அவர்தான் நாடறிந்த மேதையா?
தெரிந்ததையும் புரியாதபடி சொன்னால் அவர்தான் நாடறிந்த பேதையா?

முனைவர் பட்டத்தை வாங்க முடிந்த அனைவரும் படித்த மேதைகளா?
முனைவர் பட்டத்தை வாங்க முடியாத
அனைவரும் படிக்காத பேதைகளா?

- தஞ்சை த இராமநாதன்


Wednesday, 24 August 2022

பழுத்தாலும் பழமாகாத மிளகாய்

 

பழுத்தாலும் பழமாகாத மிளகாய்

பச்சை மிளகாய்க் காரம் பத்து மிளகைச் சேர்த்தாலும் கிடைக்காதக் காரம்
பத்து மிளகில் கிடைக்கும் சாரம்  பல மிளகாயையும் விரட்டிவிடும் தூரம்
பட்ட மிளகாயின் வீரம் தூளானாலும்            தூளே தூள் கிளப்பிவிடும் பாரும்
பட்ட மிளகின் காரம் தூளாகித் தூவும் உணவின் சுவைதனில் பாரும்
மிளகாய்ப் பழுத்தாலும் மிளகாயெனவே பெயரெடுத்தக் கார மிளகாய்
மிளகுப் பழுத்ததாவெனப் பார்த்தாலும்              மிளகு மிளகெனவே நிலைக்கும் மிளகாய்!

- தஞ்சை த இராமநாதன்



Monday, 22 August 2022

டமில்நாடு தலைநகரம் Chennai

 

டமில்நாடு தலைநகரம் Chennai

சென்னையே உன்னையே மெட்ராஸ் என அழைத்தார்களே முன்னையே
சென்னையே உன்னையும் சேர்த்து ஆண்டவர் சோழர்தானே முன்னையே!

இடையில் அவன் ஆண்டான் இவன் ஆண்டானென ஆடாதே சென்னையே
ஆண்டவரே இல்லையென சொல்லி ஆண்டவன் பெயரேன் சென்னையே?

பல்லவ சேர பாண்டிய சோழ மன்னரின் மாநகரமாகி சிறப்புறு சென்னையே
டமில்நாடு Thamizhnatu என மாறி மாறாப் புகழைப் பெற வித்திடு சென்னையே!

மாறவே மாட்டேனென அடம் பிடித்தால் Sennaiயாக மாறிவிடு சென்னையே!

- தஞ்சை த இராமநாதன்


Sunday, 21 August 2022

உப்பிட்டவரை உயிருள்ளவரை மறக்க முடியுமா?

 

உப்பிட்டவரை உயிருள்ளவரை மறக்க முடியுமா?

பெருமளவில் பிரியாணி சமைத்து சிறிதளவு உப்போடு உண்டதை மறக்க முடியுமா?
பெருமளவில் பிரியாணியை பந்தியில் உப்புக் கரிக்க உண்டதை மறக்கத்தான் முடியுமா?
அளவோடு உப்பிட்டு அலாதி சுவையில்
சாப்பிட்ட பழங்காலப் பண்டத்தை மறக்க முடியுமா?
அளவில்லா உப்போடு துப்பிட வைக்கும்
இக்காலப் பண்டத்தை மறக்கத்தான் முடியுமா?

அளவோடு உப்பிட்டவரை மறந்தாலும் அளவில்லாது உப்பிட்டவரை மறக்கத்தான் முடியுமா?

- தஞ்சை த இராமநாதன்


Saturday, 20 August 2022

கடலில் சுதந்திரமா? கடலுக்கு சுதந்திரமா?

கடலில் சுதந்திரமா? கடலுக்கு சுதந்திரமா?

தரையின் எல்லையாக வேலியாலே எல்லையை அமைத்துப் பிரித்தோம்
வான் எல்லையாக தரையிலேயே                      எல்லையைப் பிரித்து அமைத்தோம்
கடலின் எல்லையாக அலையிலே
எல்லையைப் பிரித்து மிதந்தோம்
தரையைப் பிரித்ததாலே தரை தாண்டி
சென்று சேர்வதைத் தடுத்தோம்
காற்றைத் தடுத்து எல்லையைத் தாண்டாது
தடுக்க முயன்றாலும் தோற்போம்
எல்லையைத் தாண்டும் மீனவரைத் தடுத்து
மீனைத் தடுக்க முடியாது திகைப்போம்!

- தஞ்சை த இராமநாதன்

Friday, 19 August 2022

காலத்தை வென்றார் உண்டோ?

 

காலத்தை வென்றார் உண்டோ?

ஒவ்வொரு நொடியும் நேரம் ஓடிக் கொண்டே இருக்குது                                                            ஒவ்வொரு நொடியும் வயதும் கூடிக் கொண்டே இருக்குது

பன்னிரெண்டுக்குப் பிறகு நேரம் குறைந்தும் கூடியும் சுத்துது
பன்னிரெண்டு வயதுக்குப் பிறகும் பதின்ம பருவத்தைத் தாண்டிக் கூடுது

நேரம் போகுது என்றாலும் கடிகாரம் தளராது சுற்றி சுற்றித் தொடருது
வயது ஆகுது என்றதும் உடல் தளர்ந்து முடி நரைத்து தோலும் சுருங்குது!

- தஞ்சை த.இராமநாதன்


ஆதாயமின்றி ஆட்டை மேய்ப்பவர் இல்லை

 

ஆதாயமின்றி ஆட்டை மேய்ப்பவர் இல்லை 

ஆதாயம் இல்லாமல் ஆட்டைக் கட்டிப் காப்பவரும் உலகத்தில் இல்லை
ஆதாயம் இல்லாமல் ஆட்டை ஓட்டி மேய்ப்பவரும் உலகத்தில் இல்லை
ஆட்டை வெட்டும்போது கட்டிக் காத்ததை
நினைப்பவரும் உலகத்தில் இல்லை
சாப்பாட்டை வெட்டும்போது மேய்த்ததை
நினைப்பவரும் உலகத்தில் இல்லை
கொன்ற பாவம் தின்றால் போகுமென
பேசாதவர் உலகத்தில் இல்லை
தின்ற பாவம் கொன்றால் போகுமென பேசுபவரும் உலகத்தில் இல்லை!

- தஞ்சை த இராமநாதன்


அரிய அவதாரம் ராம்சந்திரர் (பாபுஜி)

 

அரிய அவதாரம் ராம்சந்திரர் (பாபுஜி)

மனிதராய்ப் பிறந்து இறந்து மறைந்து                மறந்த அவதாரங்கள் உண்டு 
மனிதராய்ப் பிறந்து இறந்து மனதினில் நிறைந்த அவதாரங்களும் உண்டு!

பதஞ்சலிபோல் வாழ்ந்தவர் ராம்சந்திரர் ராமரைப்போல் ஒளிர்ந்தச் சந்திரன் ராம்சந்திரர்
பஞ்சுபோன்ற மனதுடன் கிருஷ்ணராய்
ஒளிர்ந்தச் சூரியன் ராம்சந்திரர்
சகஜமார்க்க முறையில் ராஜயோகாவை
சுலபமாக்கிய வெற்றியாளர் ராம்சந்திரர்
சுய உணர்தல் முறையில் தியானத்தை              சக மனிதர் யாவருக்கும் தந்தவர் ராம்சந்திரர்!

- தஞ்சை த.இராமநாதன்


Wednesday, 17 August 2022

நீதியும் நீதி மன்றத் தீர்ப்பும்

 

நீதியும் நீதி மன்றத் தீர்ப்பும்

அதிகாரத்தை வைத்து கூறப்படுவது                  இல்லை தீர்ப்பு
ஆதாரத்தை வைத்து கூறப்படுவதுதான்
நீதிமன்றத் தீர்ப்பு
சட்டத்தை மட்டும் வைத்து கூறப்படுவது இல்லை தீர்ப்பு
மற்றதை வைத்தும் கூறப்படுவதுதான்
நீதிமன்றத் தீர்ப்பு
நியாயத்தை வைத்து கூறப்படுவது
இல்லை தீர்ப்பு
விவாதத்தை வைத்து கூறப்படுவதுதான்
நீதிமன்றத் தீர்ப்பு!

- தஞ்சை த இராமநாதன்


Tuesday, 16 August 2022

கை கொடுத்ததும் பை கொடுப்பதும்

 

கை கொடுத்ததும் பை கொடுப்பதும்

விழாவிற்கு வந்தோரை வரவேற்று கை கொடுத்தது பழமையாச்சு
வந்து செல்வோரை கட்டிப் பிடித்து வழி அனுப்பியதும் பழமையாச்சு
விழாவிற்கு வருவோரும் பையைத் தேடி வருவது புதுமையாச்சு
வந்து செல்வோருக்கு பையை ஓடிக் கொடுப்பதும் புதுமையாச்சு
கையைக் கொடுத்தாலும் காலை வாரி விட்டோர் சிலர் அது பழமையாச்சு
பையைக் கொடுத்தாலும் காலை வாரி
விடுவோர் பலர் இது புதுமையாச்சு!

- தஞ்சை த இராமநாதன்


Sunday, 14 August 2022

போதைப் பழக்கமும் புழக்கமும்

 

போதைப் பழக்கமும் புழக்கமும்

போதைப் பொருட்களின் புழக்கம் அதிகமானதால் பழக்கம் அதிகமானதா?
போதைப் புழங்கிகளின் பழக்கம் அதிகமானதால் புழக்கம் அதிமானதா?
புழக்கம் அதிகமெனில் சட்டம் அதன் கடமையைச் செய்ய முடியவில்லையா?
பழக்கம் அதிகமெனில் பெற்றோர் தன்
கடமையைச் செய்ய முடியவில்லையா?
அறிவு கெட்டப் பழக்கமென தெரிந்தே அதைச் செய்வோரை அடக்க முடியாதா?
அழிவு கட்டாயம் கிட்டுமென தெரிந்தே
அதைச் செய்வோரை ஒடுக்க முடியாதா?

- தஞ்சை த இராமநாதன்


அன்பின் அன்னை இல்லம்

 

அன்பின் அன்னை இல்லம்

ஆன்மிகக் குருமார்கள் ஆசியால் கட்டப்பட்டது இந்த இல்லம்

மைத்துனர் திருநாவுக்கரசு முன்னின்று கட்டி முடிக்கப்பட்டது இந்த இல்லம் 

இருபான் ஈரொன்று வருடம் முன்பே
ஒளியூட்டப்பட்டது இந்த இல்லம்

ஈராயிரம் இருபான் இரண்டாம் வருடம் ஒளிக் கூட்டப்பட்டது இந்த இல்லம்

தஞ்சை ராஜ்யத்தில் அழகுடன் அமைந்த அமைதியான இல்லம் 

தஞ்சை ராமராஜாக்களின் அன்பு கலந்த அன்னை ஞானம் இல்லம்!

- தஞ்சை த இராமநாதன்


Friday, 12 August 2022

சைவமான யானை

 

சைவமான யானை

பசித்தாலும் தின்னப் பிடிக்காததை
நின்றுத் தின்னாது யானை
ருசித்தாலும் தின்னப் பிடித்ததை                      தின்றுத் தீர்க்காது யானை
உண்ட மரத்தை அடியோடு ஒடித்து      அழிக்காது யானை
கண்ட மரத்தை கண்டபடிக் கடித்து                    உண்ணாது யானை
தடியால் அடித்த அடியை என்றுமே                      மறக்காது யானை
அடியாள் அடித்தத் தடியை என்றுமே                  மறக்காது யானை
அசிங்கமாய் கொன்றுத் தின்று                            அசைவமாய் வாழாது யானை
சிங்காரமாய் மென்றுத் தின்று
சைவமாய் வாழுது யானை!

- தஞ்சை த இராமநாதன்


Thursday, 11 August 2022

சாலையும் பூஞ்சோலையும்

 

சாலையும் பூஞ்சோலையும்

தரத்தோடு உருவாக்கப்பட்ட சாலை
மரத்தோடு வடிவமைக்கப்பட்ட சோலை
கருமையான புத்தம் புதிய சாலை
அருமையான சுத்தம் உடைய சோலை              நல்ல தரத்தோடு தாராலான சாலை                  நல்ல தாவரத்தோடு தயாரான சோலை

பந்தாவோடு ஆரம்பமானது இவ்வேலை
பராமரிப்போடு தொடருமா இவ்வேலை?

- தஞ்சை த இராமநாதன்




Wednesday, 10 August 2022

தியாகம்

 

தியாகம்

யாகம் செய்ய நெருப்பில் நெய் தேவை
தியாகம் செய்ய இருப்பில் மெய் தேவை
யாகம் தொடர தொடர் நெருப்பு தேவை
தியாகம் தொடர தொடர் விருப்பு தேவை
யோகம் செய்ய புறத் தூய்மை தேவை
தியாகம் செய்ய அகத் தூய்மை தேவை
மோசம் செய்ய அடாவடி தேவை
தியாகம் செய்ய விடாபிடி தேவை
மோசம் செய்வோருக்கு பணம் தேவை
தியாகம் செய்வோருக்கு மனம் தேவை
துரோகம் செய்து ஏமாற்ற நடிப்பு தேவை
தியாகம் செய்து காப்பாற்ற துடிப்பு தேவை
துரோகம் செய்வோருக்கு கல் நெஞ்சம் தேவை
தியாகம் செய்வோருக்கு நல் நெஞ்சம் தேவை
துரோகச் செயல் குறைந்திடல் உடனடித் தேவை
தியாகச் செயல் நிறைந்திடல் உடனடித் தேவை
துரோகம் செய்வோரை இகழ்ந்துத் தூற்றுவோர் தேவை
தியாகம் செய்வோரை புகழ்ந்துப் போற்றுவோர் தேவை!

- தஞ்சை த இராமநாதன்


Tuesday, 9 August 2022

இறைவனுக்கு நன்றி



இறைவனுக்கு நன்றி

உண்ண முழுமையான உணவில்லை
என்றாலும்
அனைத்து உயிரையும் வாழ வைக்கும் இறைவனுக்கு நன்றி!

வாயோடு மூக்கையும் சேர்த்து மூட வைத்தாலும்
திறந்துண்டு சுவாசிக்க அனுமதித்த
இறைவனுக்கு நன்றி!

வெள்ளப் பெருக்கெடுத்து கரை தாண்டித்
தாக்கினாலும்
வெயிலின் தாக்கத்தைக் குறைத்த இறைவனுக்கு நன்றி!

- தஞ்சை த இராமநாதன்


Monday, 8 August 2022

சட்டத்தின் ஆளுமையால் வளர்ந்த நாடு

 

சட்டத்தின் ஆளுமையால் வளர்ந்த நாடு

குடிநீருக்கு ஊற்றற்ற ஊர் சிங்கப்பூர்
குடிநீருக்கு குறைவற்ற ஊர் சிங்கப்பூர்
விளை நிலம் குறைந்த ஊர் சிங்கப்பூர்
விலை நிலம் நிறைந்த ஊர் சிங்கப்பூர்
அடுக்குமாடிகள் நிறைந்த ஊர் சிங்கப்பூர்
கிடுக்குப்பிடிகள் நிறைந்த ஊர் சிங்கப்பூர்
உலகச் சந்தையை அமைத்த ஊர் சிங்ஙப்பூர்
உலகை வியப்படைய வைத்த ஊர் சிங்கப்பூர்
கடல் வளத்திற்கு உகந்த ஊர் சிங்கப்பூர் உடல் நலத்திற்கு தகுந்த ஊர் சிங்கப்பூர் சத்தம் அதிகம் இல்லாத ஊர் சிங்கப்பூர்                      சுத்தம் அதிகம் இருக்கும் ஊர் சிங்கப்பூர் பரப்பளவில் சிறிய ஊர் சிங்கப்பூர் பணத்தளவில் பெரிய ஊர் சிங்கப்பூர்!

- தஞ்சை த இராமநாதன்

Sunday, 7 August 2022

லாலாஜி மஹாராஜ்


 லாலாஜி மஹாராஜ்

உத்திரப்பிரதேசத்தில் உதித்தவர் இவர்
எத்தேசத்திலும் நிலைத்தவர் இவர்
ராஜயோகாவில் ராஜாதி ராஜர் இவர்
ராஜபோக வாழ்க்கை வம்சத்தவர் இவர்
பதஞ்சலிப் பாதையில் நடந்தவர் இவர்
பாதையை குறுகத் தறித்தவர் இவர்
ஹத யோகாவை தவிர்த்தவர் இவர்
மத மோகாவை வெறுத்தவர் இவர்
பிரணாஹுதி கண்டெடுத்தவர் இவர்
மரணபீதி வென்றெடுத்தவர் இவர்
மூன்றுடல் அடங்கிய ஓருடல் என்றவர் இவர்
மூன்றானது சத் ராஜ் தம் என்றவர்  இவர்
லெளகீகத்தை துறக்காதவர் இவர்
ஆன்மிகத்தை மறக்காதவர் இவர்!

- தஞ்சை த இராமநாதன்

Saturday, 6 August 2022

இட்லியில் இருக்கு சத்து

 

இட்லியில் இருக்கு சத்து

முழு உளுந்தை ஊற வைத்து                                கருப்புத் தோலை மிதக்க வைத்து
மிதப்பதைக் கையால் நீக்க வைத்து
மீண்டும் நீரைக் கலக்க வைத்து
வடித்துத் தோலை நீக்க வைத்து
வெள்ளை உளுந்தை ஒதுக்கி வைத்து
அரிசியைத் தனியாக ஊற வைத்து                      அழுக்கு நீரை வடிய வைத்து
ஆட்டுக் கல்லில் ஆட்ட வைத்து
தனிப் பாத்திரத்தில் எடுத்து வைத்து
உளுந்து மாவைக் கலக்க வைத்து
நொதியால் மாவைப் புளிக்க வைத்து
துணியின் துணையோடு வேக வைத்து
உடனே உண்ண வேண்டும் சுவைத்து!

- தஞ்சை த இராமநாதன்


Friday, 5 August 2022

வெகுண்டு எழுந்ததோ காவிரி?

 

வெகுண்டு எழுந்ததோ காவிரி?

ஆற்றிலே ஆர்த்தெழும் காவிரியே ஆடியிலேயே ஆடி கடலைத் தேடி ஓடி கலந்துவிடத்தான் இந்த ஓட்டமா?

படிக்காதோர் படித்தார் போன்றும் படித்தார் படிக்காதோர் போன்றும் ஆனதைக் கண்டிக்கவே இந்த ஓட்டமா?

இல்லாதோர் இருப்போரைப் போன்றும் இருப்போர் இல்லாதோரைப் போன்றும் ஆனதைத் தண்டிக்கவே இந்த ஓட்டமா?

குறிஞ்சியில் நீரோட்டம் பின் முல்லை மருதத்தில் வெள்ளோட்டம் அதன் பின் நெய்தலில் நிலையான அலை ஆட்டமா?

- தஞ்சை த இராமநாதன்

Thursday, 4 August 2022

நம்பிக்கை

 

நம்பிக்கை

கடன் வாங்கினால் கடனைக் கொடுத்து விடலாம் என்பது ஒரு சாரார் நம்பிக்கை
கடன் கொடுத்தால் கடனை வாங்கி விடலாம் என்பது மறு சாரார் நம்பிக்கை
கடவுள் துன்பத்தைத் தரவே மாட்டாரென  நினைப்பது ஒரு சாரார் நம்பிக்கை
துன்பம் வந்தாலும் நீக்குவார் கடவுள் என நினைப்பது மறு சாரார் நம்பிக்கை
தேர்தலில் வெற்றிப் பெறலாம் என நினைப்பது அரசியல்வாதி நம்பிக்கை
தேர்தலுக்குத் தேர்தல் பணம் கிடைக்கும் என நினைப்பது வாக்காளர் நம்பிக்கை
தன் பிள்ளைகள் நற்பெயரை எடுப்பர் என்பது பெற்றோரின் நம்பிக்கை
நற்பெயரை எடுக்க முடியுமாவென பிள்ளைகள் நினைப்பது அவநம்பிக்கை
இப்படித்தான் சம்பாதிக்க வேண்டுமென நினைப்பது தரமான நம்பிக்கை
எப்படியும் சம்பாதித்து விடாலாமென நினைப்பது தரங்கெட்ட நம்பிக்கை
எந்த நிலை வந்தாலும் யானைக்குப் பலமாக இருப்பது அதன் தும்பிக்கை
மந்த நிலை வந்தாலும் மனிதனுக்குப் பலமாக இருப்பது தன் நம்பிக்கை!

- தஞ்சை த இராமநாதன்


Wednesday, 3 August 2022

முடிந்த போதும் முடியாத போதும்

 

முடிந்த போதும் முடியாத போதும்

முடிந்தபோது முடியாததைப் பற்றி நினைக்க முயன்றதுமில்லை
முடியாதபோது முடிந்ததைப் பற்றி நினைக்க முடிவதுமில்லை
முடிந்தபோது முடிந்த உதவியை செய்யாமல் இருந்ததுமில்லை
முடியாதபோது முடிந்தவர்கள் உதவியை நாடி இருந்ததுமில்லை
முடிந்த கால உதவிகளைப் பெற்றோர் முழுதாகப் போற்றுவதுமில்லை
முடியாத கால உதவிகளைப் பெற்றோர் முழுதாகப் பெறப் போவதுமில்லை!

- தஞ்சை த இராமநாதன்


Tuesday, 2 August 2022

கல்லாகிப் போனதோ முதுகு?

 

கல்லாகிப் போனதோ முதுகு?

முதுகு கல்லானதால் கல்லும் முதுகானது
முதுகு வளைவானதால் கல்லும் வளைவானது
வாழ்க்கை சோகமானதால் சுமை சுகமானது
சுமை கனமானதால் சோகம் மிதமானது
தொழிலே வலியானதால் வலியே தொழிலானது
ஏழ்மை நிலையானதால் நிலைமை
ஏழ்மையானது!

- தஞ்சை த இராமநாதன்


Monday, 1 August 2022

பயிற்சியோடுக் கூடிய முயற்சி

 

பயிற்சியோடுக் கூடிய முயற்சி

மலை ஏறுவது சளைப்பாக இருந்தாலும்
மலை ஏறுபவர் சளைப்படைவதில்லை
மலை ஏறுவது களைப்பாக இருந்தாலும்
மலை ஏறுபவர் களைப்படைவதில்லை
பயிற்சிப் பெற்றவர் மலை ஏறினாலும் முயற்சி இல்லாமல் ஏற முடிவதில்லை
பயிற்சிப் பெறாதவர் முயற்சித்தாலும் முயற்சி உடனே கைகூடி வருவதில்லை
புகழ்ச்சிக்காக மலையேறச் சென்றாலும்
முயற்சிக்கு இகழ்ச்சி வருவதில்லை!

- தஞ்சை த இராமநாதன்