Friday, 12 August 2022

சைவமான யானை

 

சைவமான யானை

பசித்தாலும் தின்னப் பிடிக்காததை
நின்றுத் தின்னாது யானை
ருசித்தாலும் தின்னப் பிடித்ததை                      தின்றுத் தீர்க்காது யானை
உண்ட மரத்தை அடியோடு ஒடித்து      அழிக்காது யானை
கண்ட மரத்தை கண்டபடிக் கடித்து                    உண்ணாது யானை
தடியால் அடித்த அடியை என்றுமே                      மறக்காது யானை
அடியாள் அடித்தத் தடியை என்றுமே                  மறக்காது யானை
அசிங்கமாய் கொன்றுத் தின்று                            அசைவமாய் வாழாது யானை
சிங்காரமாய் மென்றுத் தின்று
சைவமாய் வாழுது யானை!

- தஞ்சை த இராமநாதன்


No comments:

Post a Comment