நேசிக்காமல் அன்னையாக முடியுமா?
பலரைப் பெற்றெடுத்து அன்னையானோர் பலபேர்
சிலரைக்கூட பெற்றெடுக்காது
அன்னையானோர் சிலபேர்
இவர்களெல்லாம் அன்னையாயென
பெயரெடுத்தோர் பலபேர்
இவர்கள்தான் அன்னையென பெயரெடுத்தோர் சிலபேர்
அன்னைகளுக்கு அன்னையானபின் பாட்டியாகி இறந்தோர் பலபேர்
அனாதைகளுக்கும் அன்னையாகி பாடமாகி இறந்தோர் சிலபேர்!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment