Saturday, 11 June 2022

மாம்பழத்தின் குரல்


மாம்பழத்தின் குரல்

பூத்துக் காய்த்துத் தேறியதால் 
உலுக்கி உலுக்கிப் பறிக்கப்பட்டேன்   பறிக்கப்பட்டக் காம்பின் காயத்தால் பாலைக் கண்ணீராக வடித்தேன்
இயற்கையாகப் பழுக்கும் முன்பே செயற்கைக்கு உள்ளாக்கப்பட்டேன்
பழுத்துப் பலநாள் ஆகியும் சிலநாள் பரிதாபமாய் தட்டில் வைக்கப்பட்டேன்                பறிக்கப்பட்டு தட்டில் விடப்பட்ட வரை காட்சிப் பொருளாக ஆக்கப்பட்டேன்
எப்போது வெட்டி அரிவார்கள் என்ற நினைவோடு காக்க வைக்கப்பட்டேன்
அரியாமல் எறிவார்களோ என அறியும் வலியால் அழாமல் அழுக விடப்பட்டேன்!

- தஞ்சை த இராமநாதன்





2 comments: