உலகே மாயம்
மோசம் செய்து நாசம் செய்து
ஏய்த்துப் பிழைக்கும் உலகம்
துரோகம் செய்து விரோதம் செய்து கொலை செய்யும் உலகம்
குண்டைப் போட்டு சண்டைப் போட்டு கொன்று குவிக்கும் உலகம்
நிறம் பார்த்து நிலம் பார்த்து மக்களை வேறுபடுத்தும் உலகம்
சாதகமான காலம் பார்த்து நேரம் பார்த்து சமயத்தைப் பரப்பும் உலகம்
உழைத்துத் தின்று சமைத்துத் தின்று
உறுதியுடன் வாழ்ந்த உலகம்
நெருப்பைத் தின்று நெறியைக் கொன்று
அழியப் போகும் உலகம்!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment