மரமும் நாமும்
மரம் நடுவதை வேடிக்கை ஆக்க வேண்டாம்
மரம் நடுவதை வாடிக்கை ஆக்க வேண்டும்
மரம் நட பல வண்ணத் துணிகள் வேண்டாம்
மரம் நட பல எண்ணப் பணிகள் வேண்டும்
மரம் நட்டு படம் எடுப்போர்க்கு விளம்பரம் வேண்டும்
மரம் நட்டு இடம் காப்போர்க்கு விளம்பரம் வேண்டாம்
இதில்,
நாம் யாரென நமக்குத் தெரியும்! யாராயினும், மரத்தை நடுவது நலமே!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment