அனைவரும் ஒரு நாள் பிணக்காரரே
பணம் இருந்தால் இருப்பவர் எல்லாம் உயர்வானப் பணக்காரர்கள்
இறந்து முடிந்தால் இறந்தவர் எல்லாமே உயிர்போனப் பிணக்காரர்கள்
எழுந்து வாவென இறந்தவரைப் பார்த்து வேகமாகக் கத்துவார்கள்
எழுந்து வந்தால் பேயெனக் கத்தி மோசமாகக் குத்துவார்கள்
மணம் நறுமணமென வாசனையைப் பண உடலில் தெளிப்பார்கள்
பிணம் நாறுமென வாசனையைப் பிண உடலிலும் தெளிப்பார்கள்
முதலில் அடித்துக் கொண்டு பொதுவாக கூட்டத்தோடு அழுவார்கள்
பிறகு அலட்டிக் கொள்ளாமல் மெதுவாக அடக்கத்தோடு அழுவார்கள்
போட்ட வேசத்தைக் கலைக்க வெடியைக் கொளுத்தி வெடிப்பார்கள்
காட்டாத பாசத்தைக் காட்ட கண்ணீரைக் கொட்டி வடிப்பார்கள்
பல்லக்கோடு நகர்-வலம் போனாலும் அது செத்தப் பிணமே
பாடையோடு ஊர்-வலம் போனாலும் அதுவும் செத்தப் பிணமே!
- தஞ்சை த.இராமநாதன்

Nice!
ReplyDelete🤝🤝
ReplyDelete