மழை பொழிந்தால் மனம் செல்கிறது மகிழ்வான எல்லைக்கு
மழை தொடர்ந்தால் மனம் செல்கிறது மகிழ்வற்ற தொல்லைக்கு
காலையில் மழை பொழிந்தால் கடமைக்குக் கட்டுப்பாடு போடுகின்றது
மாலையில் மழை பொழிந்தால் உழைப்புக்கு ஓய்வுக் கொடுக்கின்றது
வெயிலின் கொடுமை மழையால் நீராடப்பட்டு குளிரூட்டப் படுகின்றது
மழையின் கொடுமை வெயிலால்
சூடாக்கப்பட்டு ஒளியூட்டப் படுகின்றது!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment