அவளைப் பார்த்த அவன் அவளை எங்கோப் பார்த்ததைப்போல் பார்க்கின்றான்
அவனைப் பார்த்த அவளோ அவனை இப்போதுதான் பார்ப்பதைப்போல் பார்க்கின்றாள்
அரசுப் பணியின் மதிப்புமிகு பதவியில் இருக்கும் அவளை அவன் அவர்களென அழைக்கின்றான்
ஆளும் அரசின் மாண்புமிகு பதவியில் இருக்கும் அவனை அவளும் அவர்களே என அழைக்கின்றாள்
ஒருமையில் ஒருவரை வரவேற்றாலும் அவர்களே என அழைக்கின்றோம்
பன்மையில் பலரை வரவேற்றாலும் அவர்களே எனத்தான் அழைக்கின்றோம்
அவனும் அவளும் அவர்களென ஆனது அவனாலும் அவளாலும் ஆனது
அவர்கள் யாவரும் அவர்களெனவே ஆனது அவர்கள் அனைவராலுமே ஆனது!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment