குறிப் பார்த்து அடித்தால் ஒரே அடியில் பல மாங்காய் விழுவதைக் கண்டோம்
உடையாது மாங்காய் விழுந்தாலும் உடைத்து உப்பிட்டு உண்டோம்
குறிப் பார்த்து அடித்த அடுத்த நொடியில் பழ மாங்கனி விழுவதையும் கண்டோம்
பட்ட மணலை வாயில் படாதவாறு ஊதிக் கழுவி சுவைத்து உண்டோம்
கல்லையும் மறந்து மரத்தையும் துறந்து கடல் கடந்து வானில் பறந்து வந்தோம்
வந்தாலும் வந்த பாதையை மறக்காது கல்லோடு மாங்காயைப் பாட வந்தோம்
மண்ணை மறந்தது மறந்ததாக இருந்து விண்ணில் பறப்பது தொடர்வதாக இருந்தால்
அது மண்ணில் வாழ்வோருக்கு விருந்தாக இருந்தால்
அவர்கள் மண்ணின் மணமுள்ள மைந்தர்களாக இருக்க முடியுமா?
- தஞ்சை த.இராமநாதன்

மாங்கணி
ReplyDelete👍
DeleteGreat sir 👏👏👏
ReplyDelete🤝🤝
ReplyDeleteGreat memories sir
ReplyDelete🤝🤝
ReplyDelete