கல்லிலே கடவுளைக் காணலாம்
மலையிருந்தால் மலையைக் குடைந்து கோவிலைக் கட்டிக் காட்டியவர்கள் நாம் கட்டியக் கோவிலில் கடவுளைக் காட்டி வணங்க வைத்துக் காட்டியவர்கள் நாம்
மலையில்லா இடத்திலும் கல்லை உடைத்து கோவிலைக் கட்டிக் காட்டியவர்கள் நாம் கட்டியக் கோவிலில் கல்லினுள் கடவுளை வடிவமைத்து காட்சிப்படுத்தியவர்கள் நாம்
சிறப்பான சிலைகளை உளியால் செதுக்கி கோவிலைக் கட்டிக் காத்தவர்கள் நாம் அற்புதமான அதிசயங்களுடன் கடவுளால் கட்டிக் காக்கப்படுபவர்கள் நாம்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment