பூவில் வாசம்
மலர்ந்தும் மலராதப் பூவின் வாசம் இயற்கையில் ஒளிந்தே இருக்கும் மலர்ந்த செயற்கைப் பூவின் வாசம் செயற்கையில் ஒழிந்தே இருக்கும்
இயற்கைப் பூக்களைப் போன்றதல்ல பளிச்சிடும் செயற்கைப் பூக்கள் வாடிடுவது இயற்கையானப் பூக்கள் வாடாதது செயற்கையானப் பூக்கள்
குறையோ நிறையோ பூவைக் கண்டு மகிழாதோர் பூவுலகில் அதிகம் இல்லை இயற்கையோ செயற்கையோ பூவைப் புகழாதோர் இவ்வுலகில் அதிகம் இல்லை!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment