போரிலும் சூதிலும் குதிரை
குதிரையை நம்பி மன்னன் போரிட சென்றானா என்பதும் தெரியாது
மன்னனை நம்பி குதிரை போர்க்களம் சென்றதா என்பதும் தெரியாது
வெட்டி வீழ்த்திடுவேன் என்ற ஆணவ நம்பிக்கையில் சென்றானா தெரியாது
மன்னன் மாண்டால் தாவிப் பிழைக்கும் கனவோடு குதிரை சென்றதா தெரியாது
குதிரையேறி போரிட்ட போர்க் காலம் எங்கும் மாயமாய் மறைந்ததும் புரியுது
குதிரையை வைத்து சூதாடும் காலம் எங்கும் நிரந்தரமாய் வந்ததும் புரியுது!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment