Wednesday, 28 July 2021

இயற்கைதான் வெல்லும்

 

இயற்கைதான் வெல்லும்

ஐந்து வகை நிலங்கள் ஆங்காங்கே இருந்து பூமி செழித்தது இயற்கை                                        ஐந்து வகை நிலத்தையும் நினைத்த                    இடத்தில் வடிவமைத்தது செயற்கை

கிணற்று நீரை இறைத்து மண் பானையில் வைத்துக் குடித்தது இயற்கை                              ஆழ் துளையிட்டு நீரை நெகிழியில்                      அடைத்துக் குடிப்பது செயற்கை

நடந்தே சென்று மெய் வருந்த உழைத்து செழித்து வாழ்ந்தது இயற்கை                                உட்கார்ந்தே பெருத்து நோய் வந்து                      இளைத்து வீழ்ந்தது செயற்கை                    

மதம் மாறாமல் மதம் பிடிக்காமல் மேதைபோல் வாழ்வது இயற்கை                        மதம் மாறி மதம் பிடித்த போதையால் பேதைபோல் வாழ்வது செயற்கை

மலையெல்லாம் கடலாக கடலெல்லாம் மலையாக நிலம் மாறுவது இயற்கை                  நிலம் நீர் காற்றை நாசம் செய்து                            நாசமாக்கி மனிதன் மாற்றுவது செயற்கை! 

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment