ஞாபகத்திற்கு வரும் ஞாபகங்கள்
அப்பாவின் தோளில் அம்ர்ந்து வெகு தூரம் சென்ற ஞாபகம்
அம்மா ஊற்றிய கட்டித் தயிரை கையில் பிடித்து ருசித்த ஞாபகம்
பாலத்தின் அடியில் எதிரொலியைக் கேட்க சத்தமாகக் கத்திய ஞாபகம்
பொருக்கு மண்ணில் நடந்து கால் சிவந்த ஞாபகம்
தாத்தா பாட்டிக்கெல்லாம் பல் பிடுங்கிய ஞாபகம்
அப்பாயி இடித்த வெற்றிலைப் பாக்கின் வாசம் நுகர்ந்த ஞாபகம்
ரதிக்கேற்ற மன்மதரே எனப் பாடி பரவசமடைந்த ஞாபகம்
தீபாவளிக்கு போட்டிப் போட்டு வெடி வெடித்த ஞாபகம்
புனையல் அடித்த மாடுகள் பின்னே சுற்றி சுற்றி வந்த ஞாபகம்
கவலசால் தண்ணீர் இறைக்கும் கயிற்றால் தூக்கி எறியப்பட்ட ஞாபகம்
வாய்க்காலில் மம்பட்டியால் காலை வெட்டிக் கொண்ட ஞாபகம்
பத்தாயத்தின் உள்ளே அசையாமல் ஒளிந்து விளையாடிய ஞாபகம்
பந்தால் மட்டையை சாய்த்து ஆட்டம் கொடுத்த பந்தாட்ட ஞாபகம்
பளிங்கி ஆட்டத்தில் அடித்து ஆட்டம் கொடுத்த ஞாபகம்
கிட்டிபில் ஆட்டத்தில் ஓங்கி அடித்து மகிழ்ந்த ஞாபகம்
கபடி ஆட்டத்தில் நாக்கைக் கடித்துக் கொண்ட ஞாபகம்
குறிஞ்சான் இலை மென்று நாக்கு சிவந்த ஞாபகம்
குளத்தில் அக்கரைக்கு நீந்திச் சென்ற ஞாபகம்
இன்னும் சொல்லாமல் இருப்பது எத்தனை ஞாபகங்களோ?
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment