வள்ளலார் பரம்பரை
வாடியப் பயிரில் வாடும் மனிதா வடலூரார் வழியில் வந்த மனிதா
ஓர் இரவில் நகரமும் மூழ்கலாம் மறு இரவில் பயிரகமும் துளிரலாம்
பொருக்குதான் உனக்குப் பஞ்சு மெத்தை அது கொடுக்கும் உனக்கு மெல்ல சுகத்தை
மனம் கரைந்துக் கண்ணீர் வழியும் மேகம் கரைந்துத் தண்ணீர்ப் பொழியும்
கண்மாய் ஏரி நீரால் நிறையும் பசி பட்டினி விரைவில் குறையும்
ஆண்டுதோறும் மழைப் பொழியணும் உழைப்பவர் உயர்வோடு வாழணும்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment