மண்ணின் மணல்
மண்ணை அள்ளுவதில் கொள்கைக் கொண்டார் கொள்ளை அடிப்பதிலும் கொள்கைக் கொண்டார்
அள்ளுவதோ அளவில்லா அளவில் மணல் அள்ளியளவும் அள்ளாதளவும் அங்கே அவ்வளவும் மணல்
மலை உடைந்து உருமாறிய ஆற்று மணல் நிலைமாறி நீரோடு கலந்த ஊற்றுமணல்
பொன் விளையும் மண் அக்கால பழமொழி மண்ணேதான் பொன் இக்கால புதுமொழி
மனிதனின் வண்டியில் ஊர்வலமாய் மண் ஊர்வல ஊர்தியில் இறுதியில் மனிதனும் மண்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment