Friday, 25 June 2021

உயர்ந்த மனிதர்

 

உயர்ந்த மனிதர்

உருவத்தில் உயர்ந்த மனிதர்                                உள்ளத்தாலும் உயர்ந்த மனிதர்

மக்களுக்காக வாழ்ந்த மனிதர்                              மக்களால் வீழ்ந்த மனிதர்

தனக்கென பணம் சேர்க்காத மனிதர்  தனக்கென குணம் சேர்த்த மனிதர்

எளிய வாழ்க்கை வாழ்ந்த மனிதர்                        ஏழ்மை வாழ்வில் வாழ்ந்த மனிதர் 

கல்விக்காக பள்ளி திறந்தார்                                  பசியாற உணவும் தந்தார்

படிக்காமல் படிக்க வைத்தார்              படிப்பினால் சிறக்க தந்தார்

சுய நலம் பேணாத மனிதர்                                    பொது நலம் பேணிய மனிதர்

மணக்கும் மனதோடு வாழ்ந்தவர்                  மணக்காத வாழ்வோடு வாழ்ந்தவர்

அமைதியுடன் இருந்தத் தமிழர்      வறுமையுடன் இறந்தத் தமிழர்!

- தஞ்சை த இராமநாதன்

2 comments: