காந்தி மகான்
சட்டத்தில் சிறப்புடன் உயர்வானப் பட்டம் பட்டத்தின் சிறப்புடன் உயர்வானத் திட்டம்
திட்டத்தின் பாதையில் மக்களுக்குப் பெரும் பணி மக்களோடு மக்களாகி மக்களுக்கு அரும் பணி
நாட்டில் நெடுந் தூரம் நடந்தே சென்றார் நாட்டில் கடும் துயரம் கடந்தே வென்றார்
எளிய உடையில் கண்டார் வீர நடை வீர நடையில் கொண்டார் அமைதிப் படை
சீறிப்பாயாத அமைதியான ஆண் சிங்கம் சீரிய செயல் செய்வது அவரின் அங்கம்
மிரட்டாமல் மிரட்டியதிலும் பெரும் வீரர் அடிக்காமல் அடித்ததிலும் பெரும் தீரர்
மனித ஆத்மாக்களில் மகா ஆத்மா பரமாத்மாவோடு இணைந்த மகா ஆத்மா
கர்ம வினைகள் நீங்கிப் பிரிந்த ஆத்மா அகிம்சை மழையைப் பொழிந்த ஆத்மா
காசு பதவிக்காக குறி வைக்காத மகாத்மா தேசப் பணிக்காக குறி வைத்த மகாத்மா
வைத்தக் குறி தப்பாது நாட்டை மீட்டெடுத்த மகாத்மா வைத்தக் குறி தப்பாது சுடுபட்டு மாண்டுவிட்ட மகாத்மா!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment