Tuesday, 24 March 2026

ஓயுதல் அகற்று

 

ஓயுதல் அகற்று

உழைத்து உயர வேண்டிய களத்தில் குந்தியே பிந்தி மடியாதே
உடல் ஓய்வெடுக்க விரும்பும் காலத்தில்
அயர்ந்து ஓய்வெடுக்க மறுக்காதே

ஆக்க முயற்சி திருவினை ஆக்கும் என்பதை மறந்து
சோம்பித் திரிந்து தீவினை ஆக்கி     தீர்ந்து விடாதே

பசுமை செழித்து விளைந்த வேளாண்மை
வெள்ளத்தில் அழிந்தாலும்
உள்ளத்தில் அழியாத மேலாண்மை
வளமாக்கிடும் மறவாதே!

- தஞ்சை த.இராமநாதன்

No comments:

Post a Comment