கெட்டும் கீழுறேல்
கேடு கெட்டவர்களின் கெட்ட செயல்களால் கெடுதல் வந்தாலும்
கெட்டுப்போய் கீழே வீழ்ந்து விடாமல்
ஆண்டவன் அருளால் எழுந்திடுவாய் அருள் பெற்ற பிள்ளைகாள்
உற்றாரும் கற்றாரும் மட்டுமே ஓரிடத்தில் வாழ்வதும் இல்லை
ஏமாற்றுவாரும் தூற்றுவாரும் ஒரே இடத்தில் வாழாமலும் இல்லை
தீங்கு செய்து தீமை செய்து மாயை வாழ்க்கையில் மயங்கிடும் மானிடா
உதவி செய்து உள்ளம் மகிழ்ந்து
வாழ்ந்தால் கேடில்லை கேளடா!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment