ஐந்திணையில் நான்கினைக் கடந்து
ஆறோடு ஆறு ஆறாகவே இருந்து
ஆறாக ஓடோடிக் கடலோடுக் கலந்து கரிக்கப் போவதை அறியாத ஆறே
ஆறு அறிவுகளைப் பற்றித் தெளிந்து
ஆற அமர்ந்து ஆறாவதை அறிந்து பெரியோர் அறிவுரைக்குப் பணிந்து
தன்னிலை உணர்வது ஆறாம் அறிவே
ஆறக் கூடிய மனதை ஆற விடாதவாறு சுட்டச் சொல்லின் காயம் ஆறாதவாறு
அவதியின் அல்லலைக் காட்டாதவாறு வயோதிக வயதில் வாடுவோரைப் பாரு!
- தஞ்சை த.இராமநாதன்

ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்
ReplyDeleteஆறறிவு இல்லா மனிதற்க்கு மிருகம் என்று பெயர்.
மிக்க நன்றி
👍
Delete