இந்த தினம் என் தந்தை இறந்த தினம்
எந்தன் மனதில் ஆறாத வடுக்களின் ஏழாவது வருட தினம்
அய்யாவென என்னை அழைத்துச் சிரித்துக் கொண்டாடிக் கொண்டாட வைத்த அப்பா
அய்யோவென நான் கதறி அழுது தொழுது பார்த்தாலும் உங்களைக் கண்களால் காண முடியவில்லையே அப்பா!
பயமற்ற பண்பட்ட பண்பாட்டுடன் வீரத்தைக் கொடுத்ததற்கு நன்றி அப்பா
பணத்திற்காக மனதை மாற்றாத மாசற்ற குணத்தைக் கொடுத்ததற்கும் நன்றி அப்பா!
- தஞ்சை த.இராமநாதன்

💐❤️👏
ReplyDelete🙏🙏
Delete