சொந்த பந்த சுமையைத் தூக்கித் தூக்கித் தூக்கமிழந்தவர் தந்தையார்
சுமந்த சுமை பிள்ளையைத் தாக்காமல் பார்த்துக் காத்தவர் தந்தையார்
தன் பிள்ளைத் தன்னைவிட மேலே உயரத் தூணாகத் தாங்கிப் பிடித்தவர் தந்தையார்
தனக்கு வேண்டியதைத் தேடாது தன் பிள்ளைக்காகத் தேடி ஓடியவர் தந்தையார்
தாங்க முடியாத தாக்கம் தாக்கினால்
அப்பா என அலறுவர் தந்தையற்றோர்
தாங்கவே முடியாத தாக்கம் தாக்கினால்
எப்பா எனக் கதறுவர் தந்தையற்றோர்
எத்தனை உறவை இழந்தாலும் உறவே உறவின் உணர்வை மறந்தாலும்
அப்பனின் உறவை இழந்து உயிரின் உணர்வை மறந்தால் இழிவே!
- தஞ்சை த.இராமநாதன்

Super! 👌
ReplyDelete🙏
Delete