Saturday, 10 August 2024

தன்னைத் தானே அறியலாம்


தன்னைத் தானே அறியலாம்

அரிவாள் ஏந்தியவர்கள் அடிதடியெனும்    சதியால் முந்தியவர்கள்
அறிவால் முந்தியவர்கள் விடாபிடியெனும் 
விதியால் பிந்தியவர்கள்

போதைக்கு அடிமையானவர்கள் பூமிக்கு
சுமையான தீயவர்கள்
போதிக்கத் துணையானவர்கள் சாமிக்கு இணையான தூயவர்கள்

அறிந்து அநியாயம் அக்கிரமம்    செய்வோர்கள் அயோக்கியர்கள்
தெளிந்து தினமும் தியானம்        செய்வோர்கள் தவப்புதல்வர்கள்

பணத்துக்காகப் பல் இளிப்பவர்கள் குணமிழந்த மனிதப்பதர்கள்
குணத்துக்காகத் தோள் கொடுப்பவர்கள்
மனம்கனிந்த மாமனிதர்கள்!

- தஞ்சை த இராமநாதன்

6 comments: