அன்று,
அடிமைத்தனம் அகன்றிடத்தான் கிடைத்தது சுதந்திரம்
ஆங்கிலேயர் ஆட்சி அகன்றிடத்தான் கிடைத்தது சுதந்திரம்
இன்னுயிர்கள் நொந்து செத்துத்தான் கிடைத்தது சுதந்திரம்
ஈடு இணையற்ற தியாகத்தால்தான் கிடைத்தது சுதந்திரம்
உறுதி மிகுந்த கோட்பாட்டால்தான் கிடைத்தது சுதந்திரம்
ஊக்கம் நிறைந்த செயல்பாட்டால்தான் கிடைத்தது சுதந்திரம்
ஐக்கிய தொடர் போராட்டத்தால்தான் கிடைத்தது சுதந்திரம்
ஒருமித்த கொள்கையால்தான் கிடைத்தது சுதந்திரம்
ஓங்கிப் பிடித்த தேசக் கொடியால்தான் கிடைத்தது சுதந்திரம்
அவையம் யாவும் அங்கீகரித்துத்தான் கிடைத்தது சுதந்திரம்!
இன்று,
பசியும் உண்டு பட்டினியும் உண்டு கொலையும் உண்டு கொள்ளையும் உண்டு போதையும் உண்டு பேதையும் உண்டு துரோகமும் உண்டு துயரமும் உண்டு... சுதந்திர மாதா கண்ணீர் வடிப்பது இவற்றையெல்லாம் கண்டு!
- தஞ்சை த இராமநாதன்

மிக அருமை!
ReplyDelete🙏🙏
ReplyDeleteஅருமை
ReplyDelete🙏🙏
ReplyDeleteSuperb sir....
ReplyDelete🙏🙏
ReplyDeleteஅருமை
ReplyDelete🙏🙏
ReplyDeleteSuper Sir
ReplyDelete