ஆறாத எண்ணம்
மாறாத எண்ணமாயின் அது என்றென்றும் ஆறாத எண்ணமே
மாறிய எண்ணமாயின் அது என்றென்றும் ஆறிய எண்ணமே
எண்ணாத எண்ணமாயின் அது என்றென்றும் எண்ணில்லா எண்ணமே
எண்ணும் எண்ணமாயின் அது என்றென்றும் எண்ணினுள் எண்ணமே
சொல்லும் எண்ணமாயின் அது என்றென்றும் கொல்லாத எண்ணமே
கொல்லும் எண்ணமாயின் அது என்றென்றும் சொல்லாத எண்ணமே
உருகா உளத்தினை உருக வைத்திடும் வாசகம் திருவாசகத்திடமே
உருகும் உளத்தினை பெருக வைத்திடும் வாசகமும் திருவாசகத்திடமே!
தஞ்சை த இராமநாதன்

நல்லெண்ணமே நலம் தரும் மாமருந்து
ReplyDelete👍👍
ReplyDelete