Saturday, 30 March 2024

ஆறாத எண்ணம்


ஆறாத எண்ணம் 

மாறாத எண்ணமாயின் அது என்றென்றும் ஆறாத எண்ணமே
மாறிய எண்ணமாயின் அது என்றென்றும் ஆறிய எண்ணமே 

எண்ணாத எண்ணமாயின் அது என்றென்றும் எண்ணில்லா எண்ணமே 
எண்ணும் எண்ணமாயின் அது என்றென்றும் எண்ணினுள் எண்ணமே 

சொல்லும் எண்ணமாயின் அது என்றென்றும் கொல்லாத எண்ணமே
கொல்லும் எண்ணமாயின் அது என்றென்றும் சொல்லாத எண்ணமே 

உருகா உளத்தினை உருக வைத்திடும் வாசகம் திருவாசகத்திடமே 
உருகும் உளத்தினை பெருக வைத்திடும் வாசகமும் திருவாசகத்திடமே!

தஞ்சை த இராமநாதன் 

2 comments: