Thursday, 13 July 2023

அன்பைத் தந்த மாமா

 

அன்பைத் தந்த மாமா
(4வது வருட நினைவு நாள் 13-07-2023)

இரத்த சொந்தங்களையும் மொத்தப் பந்தங்களையும் படிக்கத் தூண்டிய ஆன்மிகப் பகுத்தறிவுப் பண்பாளர்

பணத்தின் செல்வ வளங்களோடும் குணத்தின் சொல் வளங்களோடும்    சீரோடும் சிறப்போடும்  வாழ்ந்தவர்

தமிழில் இலக்கண எளிய மரபோடும் ஆங்கிலப் புலமையில் வலிய அறிவோடும் 
தெளிவாக எழுதவும் பேசவும் தெரிந்தவர்

தாயின் வழியில் என் மாமாயிவர்             தாரத்தின் வழியில் என் மாமனாரிவர்
தரத்தின் வழியிலோ மாமனிதரிவர்

உறவுக்கு உறுதுணையாக இருந்து
மரபுக்கு உதாரணமாக இருந்தார்
பாசத்துடன் உண்மையாக இருந்து
நேசத்துடன் மென்மையாக இருந்தார்

கடமையைக் கண்ணியத்துடன் காத்து
கட்டுப்பாட்டைக் கண்டிப்புடன் காத்தார்
உரிமையை உறுதியோடுக் காத்து
உடைமையை இறுதிவரைக் காத்தார்

பகுத்தறிவோடு சிந்திக்க வைத்து
பண்பாளர்களோடு சந்திக்க வைத்தார்
பயின்று பாடத்தைப் படிக்க வைத்து
முயன்று பட்டத்தைக் கிடைக்க வைத்தார்

அவர் இருந்தபோது ஆறுதலாய்        இருந்ததை உணர வைக்கின்றார்
அவர் இல்லாதபோது மாறுதலாய்    இருப்பதை உணர வைக்கின்றார்

அவர் இருந்ததை எண்ணும்போது                    ஆனந்தக் கண்ணீரில் தெரிகின்றார்
அவர் இல்லாததை எண்ணும்போது அழுகைக் கண்ணீரில் தெரிகின்றார்!

- தஞ்சை த.இராமநாதன் 

4 comments:

  1. Dear Sir
    I have read all your Kavithaigal. Really all incidents have been brought to village culture,pride. No words to praise your words as they twin my nerves. Dr.P.Baskar

    ReplyDelete
  2. நினைவஞ்சலி 😭 🙏தாதாவின் நினைவு இறங்கல் வரிகள் நெஞ்சத்தை கலங்கவைக்கிறது

    ReplyDelete