கவிஞருக்கு அழகு...
கவிஞராக இருப்போர் ஊற்றுக் கவிதையை அருமையாகப் படைக்கவும் வேண்டும்
கவிஞராக இருப்போர் வேற்றுக் கவிதையைப் பொறுமையாகப் படிக்கவும் வேண்டும்
புதுக் கவிதையாக இருந்தாலும் அக்கவிதை புரட்சியை உண்டாக்கவும் வேண்டும்
புரட்சிக் கவிஞராக இருந்தாலும் அக்கவிஞர் புதுமையை உண்டாக்கவும் வேண்டும்
கவியாக இருப்பவர் அறிஞரானால் கவியறிஞராக இருக்க வேண்டும்
கவிஞராக இருப்பவர் அரங்கேறினால் கவியரங்கமாக இருக்க வேண்டும்
கவிஞருக்கு மற்றக் கவிஞரின் கவிதையைப் படித்துப் பழகவும் வேண்டும்
கவிஞருக்கு மாற்றுக் கருத்துடையக் கவிதையைப் படித்துப் பார்க்கவும் வேண்டும்
படித்தவர் கவிஞராக இருந்தால் படிக்காதவரையும் படிக்க வைக்க வேண்டும்
படிக்காதவர் கவிஞராக இருந்தால் படித்தவரையும் படிக்க வைக்க வேண்டும்!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment