Tuesday, 1 November 2022

மோர் குழம்பு

 


மோர் குழம்பு

பிறந்தக் கன்றுக்குக் கொடுக்காது
கொதிக்க வைத்தால் கடும்புப் பால்

கன்றைக் கொஞ்சம் குடிக்க வைத்து கறந்ததைச் சேர்த்தால் குடும்பப் பால்

கறந்தப் பாலைக் கொதிக்க வைத்து சூட்டோடுக் குடித்தால் சூடானப் பால்

சூடானப் பாலைக் கெடாமல் தடுத்து
நொதிக்க வைத்தால் தயிரானப் பால்

தயிரில் வெண்ணெய்யை கடைந்துப் பிரித்தால் மோராக தயாரானப் பால்

மோரை அளவோடு கொதிக்க வைத்து தாளித்ததால் மோர் குழம்பானப் பால்!

- தஞ்சை த.இராமநாதன்


6 comments: