காலத்தை வென்றார் உண்டோ?
ஒவ்வொரு நொடியும் நேரம் ஓடிக் கொண்டே இருக்குது ஒவ்வொரு நொடியும் வயதும் கூடிக் கொண்டே இருக்குது
பன்னிரெண்டுக்குப் பிறகு நேரம் குறைந்தும் கூடியும் சுத்துது
பன்னிரெண்டு வயதுக்குப் பிறகும் பதின்ம பருவத்தைத் தாண்டிக் கூடுது
நேரம் போகுது என்றாலும் கடிகாரம் தளராது சுற்றி சுற்றித் தொடருது
வயது ஆகுது என்றதும் உடல் தளர்ந்து முடி நரைத்து தோலும் சுருங்குது!
- தஞ்சை த.இராமநாதன்

உண்மைதான்
ReplyDelete🤝
Delete