Friday, 20 May 2022

திரும்புகிறது வரலாறு

 

திரும்புகிறது வரலாறு

கொலை செய்து இறக்க வைத்தவன் திக்கற்று திண்டாடுவான்
கொள்ளையடித்து ஊரைக் கெடுத்தவன்
ஊராரால் உதைக்கப்படுவான்

பதவி இருக்கும்போது போலியாக சிங்கம்போல் நடிப்பான்
பதவி இழக்கும்போது பரிதாபமாக அசிங்கப்பட்டு அல்லல்படுவான்

பழிக்குப் பழியென பழிவாங்கக் கூடவே கூடாது
இயற்கையதன் வழியில் பழி வாங்காது விடவே விடாது!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment