குன்றுகள் கண்டு மகிழ்வது நன்று
மலையோ எனப் பார்த்தால் மலை குன்றி குன்று குன்றாகத் தோற்றம்
காடோ எனப் பார்த்தால் புல் புதர் கலந்த குறுங்காடாகத் தோற்றம்
செழித்து வளர்ந்து இளநீரைத் தர காத்து நிற்கும் தென்னை மரங்கள் அங்கே
தென்னைக்கும் நீர்க் கொடுத்து குலையோடு ஒத்தைப் பனையும் அங்கே
நன்மைதரும் மரங்களுடன் செடிகள் சூழ நன்செய் நிலம் போல ஒரு தோற்றம்
குன்றைச் சார்ந்த மேட்டுப் பகுதியான புன்செய் நிலம் போலவும் ஒரு தோற்றம்
குருவிகளும் சிறு பூச்சி புழுக்களும் உல்லாசமாய் உயிர் வாழும் அங்கே
குன்றின் மேலே தவழும் கார் முகில் குளிர்ந்து மாரியாய் மாறும் அங்கே!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment