கடுமையான சட்டம் தேவை
ஊரே சிரித்தது என்றால் ஊர் மக்களென்றுதானே பொருள்
நாட்டு மக்கள் அழுதால் நாட்டின் அவலமென்றுதானே பொருள்
சட்டத்தை மீறுகின்றார்கள் என்பது சட்டத்தில் உள்ள குறை
திட்டத்தை மறுக்கின்றார்கள் என்பதும் திட்டத்தில் உள்ள குறை
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கடுமை வேண்டும்
திட்டத்தைத் தீட்டி மெத்தனம் இல்லாத பெருமை வேண்டும்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment