நன்றியுள்ள ஜீவன் நாயா? மனிதனா?
வெளியில் சென்று வந்தால் எப்போதும் துள்ளிக் குதித்து வரவேற்பது நாய்
வெளியூர் உறவினர் எப்போதாவது வந்தாலும் முகம் சுளிப்பவன் மனிதன்
உணவு எப்போதோ கிடைத்ததை நினைவில் நிறுத்தி கொண்டாடும் நாய்
வாழ்வுக் கொடுத்தவர்களையே முதுகில் குத்துபவன் மனிதன்
எப்போதோ நடந்ததை நன்றியுடன் எப்போதும் நினைப்பது நாய்
எப்போது உதவி செய்தாலும் செய்ததை அப்போதே மறப்பவன் மனிதன்
வளர்ந்து வந்தப் பாதையை மறக்காமல் நன்றியுடன் வாழ்வது நாய்
வளர்ந்து வந்தப் பாதையை மறக்கும் நன்றி கெட்டப் பாவி மனிதன்
நன்றி மறக்காமல் மிச்சம் மீதியென கிடைத்ததை உண்டு வாழ்வது நாய்
நன்றி மறந்து மானம் இழந்து நாதியற்று அதிகமாக இறப்பவன் மனிதன்
பாப்பாவைக் கொஞ்சி தெருவில் திரிந்தாலும் வஞ்சகம் இல்லாதது நாய்
கெஞ்சிக் கொஞ்சி அயோக்கித் தனத்தால் கடத்திக் கொல்வதால் பாவியானாய்!
- தஞ்சை த இராமநாதன்
அருமை
ReplyDelete