Thursday, 23 September 2021

மனமிருந்தால் போதும்

 

மனமிருந்தால் போதும் 

விதையில் இருந்து மரம்; மரத்தில் இருந்து விதை

விதையின் உள்ளே பூஜ்ஜியம்; பூஜ்ஜியத்தில் இருந்து ராஜ்ஜியம்

மதம் பிடித்தால் புது மதம்; மதம் பிடித்ததால் பல மதம்

எங்கும் இருப்பது இறைவனே; பூஜ்ஜியமாக இருப்பதும் இறைவனே

மனிதரைப் பிரிக்கக் கூடாது மதம்; மனிதரை மதம் மாற்றக் கூடாது மதம்

இறந்தவரை துதிக்க வேண்டும் மதம்; இரப்பவரை மிதிகக் கூடாது மதம்

மதத்தை மறந்தார் மனதால் நிறைந்தார்; மனதால் இணைந்து மதத்தை மறந்தார்

காற்றான இறையைப் போற்றுவோம் ; மூச்சான இறையைப்  போற்றுவோம்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment